ETV Bharat / state

கோவைக்கு விரைவில் மெட்ரோ சேவை - அமைச்சர் வேலுமணி - people got strap from minister velumani

கோவை: விரைவில் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இலவச பட்டா வழங்கினார் அமைச்சர் வேலுமணி
author img

By

Published : Sep 2, 2019, 7:38 AM IST

கோவை, போத்தனூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 20 ஆண்டு காலமாக வைத்துள்ள கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் 198 பேருக்கு பட்டாவாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மக்களுக்கு இலவச பட்டா வழங்கினார் அமைச்சர் வேலுமணி

50 ஆண்டு காலமாக இல்லாத வளர்ச்சியை தற்போது கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாகவும் கூறினார். அரசு மருத்துவமனைக்கு பல்வேறு உயர்தர சிகிச்சைகள் கிடைக்க கூடிய வகையில் 6 கோடி ரூபாய்க்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை இருக்காது எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

கோவை, போத்தனூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த 20 ஆண்டு காலமாக வைத்துள்ள கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டு 20 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் 198 பேருக்கு பட்டாவாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மக்களுக்கு இலவச பட்டா வழங்கினார் அமைச்சர் வேலுமணி

50 ஆண்டு காலமாக இல்லாத வளர்ச்சியை தற்போது கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாகவும் கூறினார். அரசு மருத்துவமனைக்கு பல்வேறு உயர்தர சிகிச்சைகள் கிடைக்க கூடிய வகையில் 6 கோடி ரூபாய்க்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை இருக்காது எனவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

Intro:கோவை போத்தனூர் பகுதியில் 198 பேருக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்கினார் அமைச்சர் வேலுமணி.Body:கோவை போத்தனூர் பகுதியில் 198 பேருக்கு 20 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்கினார் அமைச்சர் வேலுமணி

கோவை போத்தனூர் ஸ்ரீராம் நகர் பகுதியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களும் அம்மாவின் வழியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள் நீண்டகாலமாக வராமலிருந்த நம்முடைய பகுதி மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இந்த போத்தனூர் பகுதியில் நடைபெறுகிறது மேலும் பூங்கா திறப்பு விழா உயர்கோபுர மின்விளக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த பகுதியில் எண்ணற்ற திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்கள் செய்துள்ளார் இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து 20 ஆண்டு காலமாக வைத்துள்ள கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது அதன்படி 198 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது இந்த பட்டாவை தவறாக பயன்படுத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் 20 கோடி ரூபாய் மதிப்புடைய இடம் உங்களுக்காக பட்டா கொடுக்கப்பட்டுள்ளது வாசிகளுக்கு சொந்தம் இதை வைத்து வங்கி கடன் வாங்கலாம் அதற்கு தேவையான உதவிகளை அம்மாவின் அரசு உங்களுக்கு செய்து கொடுக்கும் தேர்தல் நேரத்தில்தான் சிலர் வருவார்கள் நாங்கள் எப்போதும் நலத்திட்ட உதவிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் 50 ஆண்டுகால இல்லாத வளர்ச்சியை தற்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் கோவைக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றோம் பாலங்களை கட்டி வருகின்றோம் பொள்ளாச்சி சாலை மேட்டுப்பாளையம் சாலை உள்பட அனைத்து சாலைகளும் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது அவினாசி சாலை பகுதியில் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் விரைவில் வர உள்ளது கோவைக்கு மெட்ரோ ரயிலும் விரைவில் வர உள்ளது இந்த ஆட்சி எதிர்க்கட்சிகள் ஆறுமாதம் ஒருவருடம் என்று குறை கூறி வந்தது ஆனால் தொடர்ந்து அம்மாவின் அரசு நலத்திட்டங்களை வழங்கி பொது மக்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக முதல்வர் அறிவித்தார் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தையும் அறிவித்து செயல்படுத்தி வருகின்றோம் அரசு மருத்துவமனை பல்வேறு உயர்தர சிகிச்சைகள் கிடைக்க கூடிய வகையில் எனவே இருதய சிகிச்சை பிரிவு மேலும் அதற்காக 6 கோடி ரூபாய்க்கு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரசு மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் டெண்டர் விடப்பட்டுள்ளது இதனால் 50 ஆண்டு கால அளவிற்கு குடிநீர் பிரச்சினை இருக்காது பாதாள சாக்கடை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் ஓட்டுக்காக வருபவர்கள் அல்ல நாங்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் அனைவரும் பயம் இன்றி இருக்க உரிய பாதுகாப்பு அளித்து வருகிறோம் ஏழை எளிய மக்களுக்கு இதுபோன்ற பல்வேறு இடங்களில் இலவச பட்டாக்கள் வழங்கி வருகின்றோம் கோவை மாவட்டத்திற்கு என்னென்ன தேவையோ அத்தனையும் நாங்கள் செய்து தருவோம் அம்மா உடற்பயிற்சி கூடத்திற்கு 1 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்படும் பெண்கள் உடற்பயிற்சி செல்ல ஏதுவாக அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.