ETV Bharat / state

'தீஸ்கோ தள்ளி' என முழக்கமிட்டு உடலில் கத்திபோட்ட இளைஞர்கள் - இது கோவையில் நடந்த விழா!

கோயம்புத்தூர் : விஜயதசமியை முன்னிட்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

author img

By

Published : Oct 8, 2019, 5:13 PM IST

கத்தி போடும் நிகழ்ச்சி


கோயம்புத்தூர் சுக்கிரவார் பேட்டையில் தொடங்கி ராஜவீதி வழியாகச் சென்று கோவையின் ஐந்து முக்கில் உள்ள செளடாம்பிகை கோயில் வரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கத்தி போட்டபடி, 'தீஸ்கோ தள்ளி' என்ற வார்த்தையைக் கூறிக்கொண்டே சென்றனர்.

இந்நிகழ்ச்சியை பற்றி செளடாம்பிகை கோயில் தலைவர் பாலு கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு பராகத்தி விழா நடைபெறும். செளடேஸ்வரி அம்மனை மாவு கலசத்தில் வைத்து அழைத்து வருவோம். ஆண்டிற்கு ஆண்டு இளைஞர்கள் பலர் இந்த நிகழ்வில் அதிகம் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் விரதம் இருந்து கத்தி போட்டு விரதத்தை கலைத்துக்கொள்வர். இதில் மிக முக்கியமான நிகழ்வாக 20க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்களால் தயாரான மஞ்சள் பொடியைத் தூவியும்; பட்ட காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

கத்தி போடும் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் கத்திபோடும் நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக விழா தலைவர் கூறினார்.

இதையும் படிங்க : மாணவர்களின் கலை நிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா!


கோயம்புத்தூர் சுக்கிரவார் பேட்டையில் தொடங்கி ராஜவீதி வழியாகச் சென்று கோவையின் ஐந்து முக்கில் உள்ள செளடாம்பிகை கோயில் வரை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கத்தி போட்டபடி, 'தீஸ்கோ தள்ளி' என்ற வார்த்தையைக் கூறிக்கொண்டே சென்றனர்.

இந்நிகழ்ச்சியை பற்றி செளடாம்பிகை கோயில் தலைவர் பாலு கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு பராகத்தி விழா நடைபெறும். செளடேஸ்வரி அம்மனை மாவு கலசத்தில் வைத்து அழைத்து வருவோம். ஆண்டிற்கு ஆண்டு இளைஞர்கள் பலர் இந்த நிகழ்வில் அதிகம் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் விரதம் இருந்து கத்தி போட்டு விரதத்தை கலைத்துக்கொள்வர். இதில் மிக முக்கியமான நிகழ்வாக 20க்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்களால் தயாரான மஞ்சள் பொடியைத் தூவியும்; பட்ட காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

கத்தி போடும் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் கத்திபோடும் நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக விழா தலைவர் கூறினார்.

இதையும் படிங்க : மாணவர்களின் கலை நிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா!

Intro:விஜயதசமியை முன்னிட்டு கோவையில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.Body:கோவையில் விஜயதசமியை முன்னிட்டு தெலுங்கு தேவாங்க செட்டியார் 500க்கும் மேற்பட்டோரால் கத்தி போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை சுக்கிரவார் பேட்டையில் தொடங்கி ராஜவீதி வழியாக கோவை ஐந்து முக்கில் உள்ள செளடாம்பிகை கோவில் வரை தேவாங்க செட்டியார் இளைஞர்கள் கத்தி போட்டுக்கொண்டு தீஸ்க்கோ தள்ளி என்ற வார்த்தையை கூறிக்கொண்டே சென்றனர்.


இந்நிகழ்ச்சியை பற்றி செளடாம்பிகை கோவில் தலைவர் பாலு கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு பராக்கத்தி விழா நடைபெறும் என்றும் செளடேஸ்வரி அம்மனை மாவு கலசத்தில் வைத்து அழைத்து வருவோம் என்றும் ஆண்டிற்கு ஆண்டு இளைஞர்கள் பலர் கலந்துகொள்கின்றனர் என்றும் கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் விரதம் இருந்து கத்தி போட்டு விரதத்தை கலைத்து கொள்வர் என்றும் இதில் முக்கிய நிகழ்வாக மஞ்சள் பொடி போடும் நிகழ்வு என்றார். 20 க்கும் மேற்பட்ட மூலிகை பொருட்களால் ஆன மஞ்சள் பொடி தூவும் நிகழ்வு என்றார். இந்த பொடி கத்தி பட்ட காயங்களுக்கு மருந்தாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.