ETV Bharat / state

மஹா சிவராத்திரி விழா ஆன்லைனில் நடைபெறும்: ஈஷா யோகா மையம் அறிவிப்பு - ஆன்லைனில் மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படும்

கோயம்புத்தூர்: கரோனா பெருந்தொற்று காரணமாக ஈஷா மஹா சிவராத்திரி விழா மார்ச் 11ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாசிவராத்திரி விழா ஆன்லைனில் கொண்டாடப்படும்
மஹாசிவராத்திரி விழா ஆன்லைனில் கொண்டாடப்படும்
author img

By

Published : Mar 6, 2021, 1:15 PM IST

கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆண்டு தோறும் ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு (மார்ச் 11) ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. கரோனா தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே விழாவில் நேரில் பங்கேற்க முடியும். அவர்கள் கரோனா பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மஹா சிவராத்திரி விழா ஆன்லைனில் கொண்டாடப்படும்

மற்றவர்கள் அனைவரும் தொலைகாட்சிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக கலந்துகொள்ளலாம். குறிப்பாக ஆதியோகி, தியானலிங்கம் மார்ச் 8ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும்.

ஆகவே, பொதுமக்கள் அந்த நாள்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மார்ச் 12ஆம் தேதி காலை 10:30 மணி முதல் வழக்கம்போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈஷா சத்குருவின் ஓவியம் ரூ.2.3 கோடிக்கு விற்பனை!

கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆண்டு தோறும் ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு (மார்ச் 11) ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. கரோனா தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே விழாவில் நேரில் பங்கேற்க முடியும். அவர்கள் கரோனா பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மஹா சிவராத்திரி விழா ஆன்லைனில் கொண்டாடப்படும்

மற்றவர்கள் அனைவரும் தொலைகாட்சிகள், சமூக வலைத்தளங்கள் மூலம் மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக கலந்துகொள்ளலாம். குறிப்பாக ஆதியோகி, தியானலிங்கம் மார்ச் 8ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும்.

ஆகவே, பொதுமக்கள் அந்த நாள்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மார்ச் 12ஆம் தேதி காலை 10:30 மணி முதல் வழக்கம்போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈஷா சத்குருவின் ஓவியம் ரூ.2.3 கோடிக்கு விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.