ETV Bharat / state

இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவளவிழா - ஓபிஎஸ், தமிழிசை பங்கேற்பு! - Iron Dealers Association 75th Anniversary kovai

கோவை: தமிழகத்தைப் போன்று தெலங்கானாவிலும் பிறக்கும் குழந்தைகளுக்கு பச்சை நிறப் பரிசுப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கியதை வரவேற்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

function
function
author img

By

Published : Dec 16, 2019, 2:58 AM IST

கோவை ஆர்.எஸ். புரத்தில், மாநகராட்சி கலையரங்கத்தில் இரும்பு வணிகர்கள் சங்கத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “இரும்பு வணிகம் என்பது இந்தியாவில் வர்த்தக ரீதியாகவும், மனிதர்களின் மாற்றத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளது. அதிமுக அரசு அதனை வரவேற்கிறது, இரும்பு வணிகர்களுக்கு என்றும் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்” என்றார்.

அதன்பின் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “இரும்பு என்பது அனைத்து தொழில் துறைக்கும் உதவக்கூடியது. இந்த 75ஆம் ஆண்டு பவள விழா இத்துடன் முடிவடையாமல், நூறாவது ஆண்டு விழாவையும் கொண்டாட வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.

விழாவில் உரையாற்றிய தமிழிசை, ஓபிஎஸ்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கான பரிசுப் பெட்டகத்தை போலவே, தெலங்கானாவிலும் ஜெயலலிதா நினைவாக, பச்சை நிறப் பெட்டியிலேயே தெலங்கானா அரசு பிறந்த குழந்தைகளுக்கான பரிசு பெட்டியை வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'ஜெ. ஜெயலலிதா எனும் நான்' - தயக்கத்திலிருந்து மீண்டு இரும்பு மனுஷியாய் உருவெடுத்தவரின் கதை

கோவை ஆர்.எஸ். புரத்தில், மாநகராட்சி கலையரங்கத்தில் இரும்பு வணிகர்கள் சங்கத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், “இரும்பு வணிகம் என்பது இந்தியாவில் வர்த்தக ரீதியாகவும், மனிதர்களின் மாற்றத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளது. அதிமுக அரசு அதனை வரவேற்கிறது, இரும்பு வணிகர்களுக்கு என்றும் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்” என்றார்.

அதன்பின் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “இரும்பு என்பது அனைத்து தொழில் துறைக்கும் உதவக்கூடியது. இந்த 75ஆம் ஆண்டு பவள விழா இத்துடன் முடிவடையாமல், நூறாவது ஆண்டு விழாவையும் கொண்டாட வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.

விழாவில் உரையாற்றிய தமிழிசை, ஓபிஎஸ்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட குழந்தைகளுக்கான பரிசுப் பெட்டகத்தை போலவே, தெலங்கானாவிலும் ஜெயலலிதா நினைவாக, பச்சை நிறப் பெட்டியிலேயே தெலங்கானா அரசு பிறந்த குழந்தைகளுக்கான பரிசு பெட்டியை வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'ஜெ. ஜெயலலிதா எனும் நான்' - தயக்கத்திலிருந்து மீண்டு இரும்பு மனுஷியாய் உருவெடுத்தவரின் கதை

Intro:இரும்பு வியாபாரிகள் சங்க பவளவிழா.Body:கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் இரும்பு வணிகர்கள் சங்கத்தின் 75ம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கம் 1944 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் அதன்பின் பன்னீர்செல்வம் அவர்கள் பவள விழா கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இரும்பு வணிகம் என்பது இந்தியாவில் வர்த்தக ரீதியாகவும் மனிதர்களின் மாற்றத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளது என்றும் அதை அதிமுக அரசு வரவேற்கிறது என்றும் இதற்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இரும்பு வணிகர்கள் சங்கத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அதன்பின் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரும்பு என்பது அனைத்து தொழில் துறைக்கும் உதவக்கூடியது என்றும் இந்த 75ஆம் ஆண்டு பவள விழா இத்துடன் முடிவடையாமல் நூறாவது ஆண்டு விழாவையும் கொண்டாட வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறினார் மேலும் தெலுங்கானாவில் குழந்தைகள் பிறக்கும்போது பரிசுப்பெட்டகம் ஆக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தந்த குழந்தைக்கான பரிசு பெட்டகத்தை போலவே அவர்களின் நினைவாக பச்சை நிறம் பெட்டியிலேயே தெலுங்கானா அரசு பிறந்த குழந்தைகளுக்கான பரிசு பெட்டியை தருவதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.