ETV Bharat / state

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நாளை(டிச.27) மனித சங்கிலி போராட்டம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 8:35 PM IST

Industrial press meet: தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் நாளை(டிச.27) மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
மனித சங்கிலி போராட்டம்

கோயம்புத்தூர்: பாப்பநாயக்கன் பாளையத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், “சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணம் உயர்வினால் தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். 30 வகையான மின் கட்டண உயர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

அதில், நாங்கள் முன் வைப்பது 5 வகையான கட்டணக் குறைவுக்கான கோரிக்கை தான். இது குறித்து முதலமைச்சரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். 430% நிலைக் கட்டணத்திற்கு (மாதாந்திரக் கட்டணம்) கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நகை, நட்டல்லாம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்குத் தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

118 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். தந்தி அனுப்புவது, கடை அடைப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாகப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். தொழில் நிறுவனங்களின் மேற்கூரைகளில் சோலர் போர்டு அமைப்பதற்கு 1.53 காசு என மின்வாரியம் எங்களிடம் வசூல் செய்து வருகின்றனர்.

ஆனால், பிற மாநிலங்களில் 50% அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(டிச.27) தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்”.

தொடர்ந்து பேசிய அவர், “தொழில்துறையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமே தவிர, இதை அரசியலாக்க வேண்டாம். வாழ்வாதாரப் பிரச்னையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது. இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

தமிழக அரசு பிரச்னைக்குத் தீர்வு கொடுக்க வேண்டும். தொழில் பாதுகாப்பு மற்றும் நலிந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். மின்சார வாரியம் தொடர்ச்சியாக, தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மேலும், 1.75 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மனிதச் சங்கிலி போராட்டத்தில், அரசியல் கட்சியினர் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திட்டமிட்டு MSME யை அழிப்பதற்கு வழிகாட்டப்படுகிறதோ என அச்சம் எழுகின்றது. எனவே முதலமைச்சர் விழித்துக்கொண்டு தொழில்துறையைப் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையினால் நம் மாநிலத்தில் இருக்கக்கூடிய சலுகைகளை வாங்கிக் கொண்டு, நம் இடத்தை உற்பத்தி நிலையங்களாக இல்லாமல் அசம்பல் நிலையங்களாக மாற்றி வருகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் .

அதிமுக பொதுக்குழுவில் சிறு,குறு தொழில்கள் பற்றிய கேள்விக்கு, அதிமுக பொதுக்குழுவில் ஏற்கப்பட்டுள்ள தீர்மானத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரச்னைகள் கொண்டு வராது பற்றித் தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வைகை கரை காற்றே நில்லு.. முன்னாள் மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு!

மனித சங்கிலி போராட்டம்

கோயம்புத்தூர்: பாப்பநாயக்கன் பாளையத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், “சிறு, குறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணம் உயர்வினால் தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். 30 வகையான மின் கட்டண உயர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

அதில், நாங்கள் முன் வைப்பது 5 வகையான கட்டணக் குறைவுக்கான கோரிக்கை தான். இது குறித்து முதலமைச்சரிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். 430% நிலைக் கட்டணத்திற்கு (மாதாந்திரக் கட்டணம்) கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம். நகை, நட்டல்லாம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்குத் தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

118 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம். தந்தி அனுப்புவது, கடை அடைப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாகப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். தொழில் நிறுவனங்களின் மேற்கூரைகளில் சோலர் போர்டு அமைப்பதற்கு 1.53 காசு என மின்வாரியம் எங்களிடம் வசூல் செய்து வருகின்றனர்.

ஆனால், பிற மாநிலங்களில் 50% அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(டிச.27) தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்”.

தொடர்ந்து பேசிய அவர், “தொழில்துறையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமே தவிர, இதை அரசியலாக்க வேண்டாம். வாழ்வாதாரப் பிரச்னையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது. இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

தமிழக அரசு பிரச்னைக்குத் தீர்வு கொடுக்க வேண்டும். தொழில் பாதுகாப்பு மற்றும் நலிந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். மின்சார வாரியம் தொடர்ச்சியாக, தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மேலும், 1.75 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மனிதச் சங்கிலி போராட்டத்தில், அரசியல் கட்சியினர் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திட்டமிட்டு MSME யை அழிப்பதற்கு வழிகாட்டப்படுகிறதோ என அச்சம் எழுகின்றது. எனவே முதலமைச்சர் விழித்துக்கொண்டு தொழில்துறையைப் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையினால் நம் மாநிலத்தில் இருக்கக்கூடிய சலுகைகளை வாங்கிக் கொண்டு, நம் இடத்தை உற்பத்தி நிலையங்களாக இல்லாமல் அசம்பல் நிலையங்களாக மாற்றி வருகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் .

அதிமுக பொதுக்குழுவில் சிறு,குறு தொழில்கள் பற்றிய கேள்விக்கு, அதிமுக பொதுக்குழுவில் ஏற்கப்பட்டுள்ள தீர்மானத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரச்னைகள் கொண்டு வராது பற்றித் தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வைகை கரை காற்றே நில்லு.. முன்னாள் மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.