ETV Bharat / state

பலத்த மழையால் நீரில் மிதக்கும் கோவை மாநகரம்!

author img

By

Published : Aug 6, 2020, 5:51 PM IST

கோவை: சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் மழை நீர் நிரம்பி வழிகிறது.

பலத்த மழையால் நீரால் நிரம்பிய கோவை
பலத்த மழையால் நீரால் நிரம்பிய கோவை

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக, நொய்யல் ஆற்றில் மழை நீர் அதிக அளவில் ஓடுகின்றது. இதனால் நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பலத்த மழையால் நீரால் நிரம்பிய கோவை

கோவை ஆனைக்கட்டி அடுத்த தாவாளம் கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 6) பெய்த பலத்த மழையால் பவானி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலத்தின் மேல்பகுதி வரை, மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் வெள்ளலூர் பாலத்திலும் வழக்கத்தைவிட அதிகமாக தரைப்பாலத்தை ஒட்டி மழை நீர் செல்கிறது.

கோவையின் புறநகர்ப் பகுதியான அன்னூர், தடாகம், வடவள்ளி, கணுவாய் போன்ற இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 5) முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் பலத்த மழையால் கோவை மாநகரமே மழை நீரில் நிரம்பி வழிகிறது.

இதையும் படிங்க: சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கும் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக, நொய்யல் ஆற்றில் மழை நீர் அதிக அளவில் ஓடுகின்றது. இதனால் நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பலத்த மழையால் நீரால் நிரம்பிய கோவை

கோவை ஆனைக்கட்டி அடுத்த தாவாளம் கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 6) பெய்த பலத்த மழையால் பவானி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலத்தின் மேல்பகுதி வரை, மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் வெள்ளலூர் பாலத்திலும் வழக்கத்தைவிட அதிகமாக தரைப்பாலத்தை ஒட்டி மழை நீர் செல்கிறது.

கோவையின் புறநகர்ப் பகுதியான அன்னூர், தடாகம், வடவள்ளி, கணுவாய் போன்ற இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 5) முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் பலத்த மழையால் கோவை மாநகரமே மழை நீரில் நிரம்பி வழிகிறது.

இதையும் படிங்க: சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கும் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.