சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (66). இவர் 20 வருடங்களாக மண்ணடி எம்.கே. கார்டன் பகுதியில் சொந்தமாக குடோன் வைத்துள்ளார். பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள ’சவுத் இந்தியா டிரான்ஸ்போர்ட்’ நடத்திவரும் பாலகிருஷ்ணன் என்பவருடன் இணைந்து 15 வருடங்களாக ’ஆர்.எம் கார்கோ’ ஏற்றுமதி, இறக்குமதி தொழிலையும் நடத்திவருகிறார்.
இந்நிலையில் ராமகிருஷ்ணணுக்கு தொழிலில் 15 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் பாலகிருஷ்ணனிடம் சென்று ’எனக்கும் குட்கா சரக்கு இறக்குமதி செய்யும் காண்ட்ராக்ட் பிடித்து தருமாறு’ கேட்டுள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாலகிருஷ்ணன் அவரது மகன் ஆஷிஷ் (27) அவரது நண்பர் விகாஸ் (27) ஆகியோரை அனுப்பியுள்ளனர். அவர்கள், தாங்களே குடோனை நடத்திகொள்வதாகவும், 15 லட்ச ரூபாய் கடனை தருவதாக ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். மேலும் வாடகை தொகையாக மாதம் 30 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் ராமகிருஷ்ணனிடம் அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதனை நம்பிய ராமகிருஷ்ணனும் வாடகைக்கு குடோனை தந்துள்ளார். பின்னர் இந்த குடோனில் பாலகிருஷ்ணன் சட்ட விரோதமாக குட்கா வியாபாரம் செய்துவந்துள்ளனர்.
இதனிடையே, குடோனில் குட்கா பதுக்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த பூக்கடை போலீசார், குடோனிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த குடோன் உரிமையாளரான ராமகிருஷ்ணணை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் 250 கிலோ குட்கா பறிமுதல்