ETV Bharat / state

ஆசன வாய் குறைபாட்டால் பிறந்த குழந்தை - மருத்துவமனையில் விட்டுச் சென்ற உறவினர்கள்! - பொள்ளச்சியில் குழந்தைக்கு அறுவைசிகிச்சை

கோவை: பொள்ளாச்சியில் ஆசனவாய் குறைபாட்டால் பிறந்த குழந்தையை  உறவினர்கள் மருத்துவக் கல்லூரியிலேயே விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

pollachi_gh_ child_ operation
pollachi_gh_ child_ operation
author img

By

Published : Dec 16, 2019, 1:23 PM IST

கோவை - சுளீஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி, மணிகண்டன் தம்பதியினருக்கு கடந்த 13ஆம் தேதி காலை 11 மணியளவில் இரண்டாவது ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்தது. அந்தக் குழந்தையை பரிசோதித்தபோது ஆசனவாய் இல்லாமல் குழந்தை பிறந்து இருப்பது தெரிய வந்தது.

அந்தக் குழந்தைக்கு ஆசனவாய் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று பரிசோதனை செய்யவும் அறுவை சிகிச்சை செய்யவும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு குழந்தையை அனுப்பினர். துரதிர்ஷ்டவசமாக குழந்தையின் தந்தையான ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மாரடைப்பின் மூலமாக 14ஆம் தேதி இறந்து விட்டார். அதனால், இந்தக் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்று கருதி, அந்தக் குழந்தையின் தந்தையினுடைய உறவினர்கள் குழந்தையைக் கோவை மருத்துவக் கல்லூரியில் விட்டுச் சென்றனர்.

பிறகு குழந்தையின் தாய் வழி உறவினர்கள் கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து அந்த குழந்தையை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முன் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் அவர்களின் உதவியோடு நேற்று இரவு குழந்தையை, தனியார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து சென்று ஸ்கேன், எக்ஸ்-ரே மூலம் குழந்தையின் உடல் வளர்ச்சி குறைவாக இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், ஆசனவாய் உருவாக்கும் முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து குடலை வயிற்று வழியாக வைத்து ' கொலாஸ்டமி' என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆசனவாய் குறைபாட்டால் பிறந்த குழந்தை

குழந்தைகள் நலப் பிரிவின் தலைவர் மருத்துவர் ரங்கராஜன், மருத்துவர் சிவசங்கர், மகப்பேறு மருத்துவர் மருத்துவர் ஜோதிகலா குழுவினருடன் அறுவை சிகிச்சை சனிக்கிழமை இரவு 10 மணிக்குத் தொடங்கப்பட்டது. இரவு 11.30 மணி அளவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. அதன்பிறகு பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பகுதியில் குழந்தைகள் நல நிபுணர்கள் பாதுகாப்பில் குழந்தை நல்ல நிலையில் உள்ளது.

சிக்கலான அறுவை சிகிச்சையைச் செய்து குழந்தையைக் காப்பாற்றிய, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குக் குழந்தையின் உறவினர்கள் அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்!

கோவை - சுளீஸ்வரன்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி, மணிகண்டன் தம்பதியினருக்கு கடந்த 13ஆம் தேதி காலை 11 மணியளவில் இரண்டாவது ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்தது. அந்தக் குழந்தையை பரிசோதித்தபோது ஆசனவாய் இல்லாமல் குழந்தை பிறந்து இருப்பது தெரிய வந்தது.

அந்தக் குழந்தைக்கு ஆசனவாய் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று பரிசோதனை செய்யவும் அறுவை சிகிச்சை செய்யவும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு குழந்தையை அனுப்பினர். துரதிர்ஷ்டவசமாக குழந்தையின் தந்தையான ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மாரடைப்பின் மூலமாக 14ஆம் தேதி இறந்து விட்டார். அதனால், இந்தக் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்று கருதி, அந்தக் குழந்தையின் தந்தையினுடைய உறவினர்கள் குழந்தையைக் கோவை மருத்துவக் கல்லூரியில் விட்டுச் சென்றனர்.

பிறகு குழந்தையின் தாய் வழி உறவினர்கள் கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து அந்த குழந்தையை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முன் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் அவர்களின் உதவியோடு நேற்று இரவு குழந்தையை, தனியார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து சென்று ஸ்கேன், எக்ஸ்-ரே மூலம் குழந்தையின் உடல் வளர்ச்சி குறைவாக இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், ஆசனவாய் உருவாக்கும் முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து குடலை வயிற்று வழியாக வைத்து ' கொலாஸ்டமி' என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆசனவாய் குறைபாட்டால் பிறந்த குழந்தை

குழந்தைகள் நலப் பிரிவின் தலைவர் மருத்துவர் ரங்கராஜன், மருத்துவர் சிவசங்கர், மகப்பேறு மருத்துவர் மருத்துவர் ஜோதிகலா குழுவினருடன் அறுவை சிகிச்சை சனிக்கிழமை இரவு 10 மணிக்குத் தொடங்கப்பட்டது. இரவு 11.30 மணி அளவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. அதன்பிறகு பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பகுதியில் குழந்தைகள் நல நிபுணர்கள் பாதுகாப்பில் குழந்தை நல்ல நிலையில் உள்ளது.

சிக்கலான அறுவை சிகிச்சையைச் செய்து குழந்தையைக் காப்பாற்றிய, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குக் குழந்தையின் உறவினர்கள் அனைவரும் நன்றியைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்!

Intro:childBody:childConclusion:பொள்ளாச்சியில் ஆசனவாய் குறைபாட்டால் பிறந்த குழந்தை அதைக் கேட்ட தந்தை மரணம் பிறந்து இரண்டு நாள் ஆன குழந்தைக்கு பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆசனவாய் அறுவை சிகிச்சை
பொள்ளாச்சி :15

பொள்ளாச்சி சுளீஸ்வரன்பட்டி சேர்ந்த மகேஸ்வரி மற்றும் மணிகண்டன் தம்பதியினருக்கு கடந்த 13.12.19 அன்று காலை 11 மணியளவில் இரண்டாவது ஆண் குழந்தை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்தது. அந்தக் குழந்தையை குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஆசனவாய் இல்லாமல் குழந்தை பிறந்து இருப்பது தெரியவந்தது.
அந்தக் குழந்தைக்கு ஆசனவாய் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று பரிசோதனை செய்யவும் அறுவை சிகிச்சை செய்யவும் கோவை மருத்துவக் கல்லூரிக்கு குழந்தையை குழந்தையின் அப்பாவின் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக குழந்தையின் தந்தை மணிகண்டன் ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பின் மூலமாக 14ஆம் தேதி பிறந்துவிட்டார். அதனால் இந்த குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்று கருதி அந்த குழந்தையின் தந்தையினுடைய உறவினர்கள் க குழந்தையை கோவை மருத்துவக் கல்லூரியில் விட்டுவிட்டு பொள்ளாச்சி வந்து விட்டனர். பிறகு குழந்தையின் அம்மாவின் உறவினர்கள் கோவை மருத்துவக் கல்லூரியில் யாரிடமும் கூறாமல் அந்த குழந்தையை மறுபடியும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்துவிட்டனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முன்னால் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கண்ணன் அவர்களின் உதவியோடு நேற்று இரவு குழந்தையை தனியார் ஸ்கேன் சென்டருக்கு அழைத்து சென்று ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே மூலம் குழந்தையின் உடல் வளர்ச்சி குறைவாக இருப்பதால் ஆசனவாய் உருவாக்கும் முயற்சியாக அறுவை சிகிச்சை செய்து குடலை வயிற்று வழியாக வைத்து ' கொலாஸ்டமி' என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் இருதய நிலை தனியார் இருதய நிபுணர் மூலம் எக்கோ ஸ்கேன் செய்த அறியப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர்கள் முகமது நவாஸ் மற்றும் டாக்டர் அருள்மணி குழந்தைக்கு மயக்கம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர், குழந்தைகள் நலப் பிரிவின் தலைவர் டாக்டர் ரங்கராஜன், டாக்டர் சிவசங்கர், மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜோதிகலா குழுவினருடன் அறுவை சிகிச்சை சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கப்பட்டது. குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன் இரவு 11.30 மணி அளவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. குடல் வயிற்றின் இடது புறமாக வைக்கப்பட்டது, அதன்பிறகு பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பகுதியில் குழந்தைகள் நல நிபுணர்கள் பாதுகாப்பில் குழந்தை நல்ல நிலையில் உள்ளது.மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா அறுவை சிகிச்சையின் போது உடன் இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
மருத்துவமனை கண்காணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்றிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முன்னால் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன் அவர்களுக்கு குழந்தையின் உறவினர்கள் அனைவரும் நன்றியை தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.