ETV Bharat / state

'முதலமைச்சர் பரப்புரையால் ஸ்டாலினுக்கு காய்ச்சல்' - பொள்ளாச்சி ஜெயராமன்

author img

By

Published : Feb 16, 2021, 9:37 PM IST

முதலமைச்சரின் பரப்புரையால் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

pollachi jeyaraman
'முதலமைச்சர் பரப்புரையால் ஸ்டாலினுக்கு காய்ச்சல்'- பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி, பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஜெயலலிதா பிறந்தநாள், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. மேலும், 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஜெயராமன் அறிவுரை வழங்கியுள்ளார்.

'முதலமைச்சர் பரப்புரையால் ஸ்டாலினுக்கு காய்ச்சல்'- பொள்ளாச்சி ஜெயராமன்

உடுமலை ரோடு, காந்தி சிலைப் பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக அரசை நடத்திவருகிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார். முதலமைச்சர் தேர்தல் பரப்புரையால் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றார்.

இதையும் படிங்க: வருகிற 25ஆம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு

கோவை: பிப்ரவரி 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி, பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஜெயலலிதா பிறந்தநாள், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. மேலும், 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு ஜெயராமன் அறிவுரை வழங்கியுள்ளார்.

'முதலமைச்சர் பரப்புரையால் ஸ்டாலினுக்கு காய்ச்சல்'- பொள்ளாச்சி ஜெயராமன்

உடுமலை ரோடு, காந்தி சிலைப் பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக அரசை நடத்திவருகிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக தலைவர் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார். முதலமைச்சர் தேர்தல் பரப்புரையால் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றார்.

இதையும் படிங்க: வருகிற 25ஆம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.