ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

author img

By

Published : Jul 24, 2019, 7:47 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பை காட்டு யானை ஒன்று சேதப்படுத்தியுள்ளது.

யானை அட்டகாசம்

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி அருகே உள்ள நவமலை பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புக்குள் அடிக்கடி ஒற்றைக் காட்டு யானை புகுந்து அச்சுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காளியப்பன் என்பவரின் ஓலைக் குடிசையை யானை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், ஏற்கனவே இந்த யானை தாக்கி பலியான மாகாளி என்பவரது வீடும் அதன் மூலம் சேதப்படுத்தபட்டுள்ளது. இந்தத் தகவலையறிந்த வனத்துறையினர் அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்த நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் சோலார் மின் வேலி அமைக்கவுள்ளதாகவும் கூடிய விரைவில் அந்த யானையைக் காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் கூறினர்.

யானை அட்டகாசம்

இதுபோல அந்த யானையின் தொந்தரவு அதிகரித்தால், தமிழ்நாடு அரசிடம் கலந்து பேசி அந்த யானையைப் பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விடவும் வனத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதி அருகே உள்ள நவமலை பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்புக்குள் அடிக்கடி ஒற்றைக் காட்டு யானை புகுந்து அச்சுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காளியப்பன் என்பவரின் ஓலைக் குடிசையை யானை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், ஏற்கனவே இந்த யானை தாக்கி பலியான மாகாளி என்பவரது வீடும் அதன் மூலம் சேதப்படுத்தபட்டுள்ளது. இந்தத் தகவலையறிந்த வனத்துறையினர் அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துவிட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்த நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சுற்றிலும் சோலார் மின் வேலி அமைக்கவுள்ளதாகவும் கூடிய விரைவில் அந்த யானையைக் காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் கூறினர்.

யானை அட்டகாசம்

இதுபோல அந்த யானையின் தொந்தரவு அதிகரித்தால், தமிழ்நாடு அரசிடம் கலந்து பேசி அந்த யானையைப் பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விடவும் வனத்துறை அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Intro:tribelBody:tribelConclusion:பொள்ளாச்சி நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பை ஒற்றை காட்டு யானை சேதம் யானையை விரட்ட வனத்துறையினர் முயற்சி.

பொள்ளாச்சி - ஜூலை- 23

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பான நவமலை பகுதியில் 40 இருக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் அடிக்கடி ஒற்றை காட்டு யானை புகுந்து அச்சுறுத்தி வந்த நிலையில் நேற்று இரவு காளியப்பன் என்பவருக்கு சொந்தமான ஓலைக் குடிசையை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தி வீட்டிற்குள் இருந்த அரிசி உள்ளிட்டவற்றை உண்டு அந்த காட்டு யானை சென்றதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே யானை தாக்கி பலியான மாகாளி என்பவரது வீட்டையும் முற்றிலும் சேதப்படுத்தியுள்ளது இந்த சம்பவத்தில் காளியப்பன் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் உயிர் தப்பினர் இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் இந்த காட்டு யானை ஏற்கனவே இரு உயிர்களை பலி வாங்கி உள்ளதும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் தக்க பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர் மேலும் இந்த நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் சோலார் மின் வேலி அமைக்கவுள்ளதாகவும் கூடிய விரைவில் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் இது போல அந்த யானையின் தொந்தரவு அதிகரிப்பின் தமிழக அரசிடம் கலந்து பேசி அந்த யானையை பிடித்து வேறு அடர்ந்த வனப்பகுதியில் விடவும் வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.