ETV Bharat / state

வனவிலங்குகள் தாக்குதல் - வால்பாறை மக்கள் அச்சம்! - வால்பாறை காட்டு யானை புலி தாக்குதல்

வால்பாறை: தொடர் வன விலங்குகள் நடமாட்டம், வன விலங்குகள் தாக்குதலால் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

valparai wild animals attack
author img

By

Published : Sep 30, 2019, 12:44 PM IST

வால்பாறையைச் சுற்றியுள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில், பகல் வேளைகளில் காட்டு யானைக்கூட்டம் வனத்தைவிட்டு வெளியேறி, தேயிலைத் தோட்டங்களில் உலா வருகிறது. மேலும் சின்கோனா, முடீஸ், நல்லமுடிப் பூஞ்சோலை, குரங்கு முடி, சோலையார் அணை, பழைய வால்பாறை, வறட்டுப்பாறை ஆகிய இடங்களில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கச்செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணிக்கு செல்கின்றனர்.

அதேபோல் கேரள எல்லைப்பகுதியான, மளுக்குப்பாறை வழியாக இடம்பெயர்ந்து வால்பாறை வந்த யானைக்கூட்டம், வறட்டுப்பாறை அரசுப்பள்ளி சத்துணவுக் கூடத்தை இடித்துத் தள்ளியது. இதையடுத்து, பொதுமக்கள் மாலை நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இரவு, பகலாக வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Valparai

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், அய்யர் பாடி எஸ்டேட்டில் வரிப்புலி ஒன்றும், ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்றும் அப்பகுதியில் உள்ள பசு மாடுகளை அடித்துக் கொன்றன. தொடர்ந்து கரடித் தாக்கி ஒருவரும் பலியாகி உள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சவரக்காடு பகுதியில் வனத்தைவிட்டு வெளியேறிய கரடிக் கூட்டம், தேயிலைத் தோட்டப் பகுதியில் உலா வருகிறது. இப்படிப்பட்ட தொடர் வன விலங்குகள் நடமாட்டத்தாலும் தாக்குதலாலும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இதையும் படிங்க:

ரயிலில் அடிப்பட்டு 33 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிரிழந்த யானை - சோக பின்னணி!

வால்பாறையைச் சுற்றியுள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில், பகல் வேளைகளில் காட்டு யானைக்கூட்டம் வனத்தைவிட்டு வெளியேறி, தேயிலைத் தோட்டங்களில் உலா வருகிறது. மேலும் சின்கோனா, முடீஸ், நல்லமுடிப் பூஞ்சோலை, குரங்கு முடி, சோலையார் அணை, பழைய வால்பாறை, வறட்டுப்பாறை ஆகிய இடங்களில் முகாமிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கச்செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணிக்கு செல்கின்றனர்.

அதேபோல் கேரள எல்லைப்பகுதியான, மளுக்குப்பாறை வழியாக இடம்பெயர்ந்து வால்பாறை வந்த யானைக்கூட்டம், வறட்டுப்பாறை அரசுப்பள்ளி சத்துணவுக் கூடத்தை இடித்துத் தள்ளியது. இதையடுத்து, பொதுமக்கள் மாலை நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் இரவு, பகலாக வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Valparai

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், அய்யர் பாடி எஸ்டேட்டில் வரிப்புலி ஒன்றும், ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்றும் அப்பகுதியில் உள்ள பசு மாடுகளை அடித்துக் கொன்றன. தொடர்ந்து கரடித் தாக்கி ஒருவரும் பலியாகி உள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சவரக்காடு பகுதியில் வனத்தைவிட்டு வெளியேறிய கரடிக் கூட்டம், தேயிலைத் தோட்டப் பகுதியில் உலா வருகிறது. இப்படிப்பட்ட தொடர் வன விலங்குகள் நடமாட்டத்தாலும் தாக்குதலாலும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இதையும் படிங்க:

ரயிலில் அடிப்பட்டு 33 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிரிழந்த யானை - சோக பின்னணி!

Intro:valpariBody:valpariConclusion:வால்பாறை உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம், தேயிலை பறிக்கும்பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சம். வால்பாறை- 30 வால்பாறை சுற்றியுள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் பகல் நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. சின்கோனா,முடீஸ், நல்ல முடி பூஞ்சோலை, குரங்கு முடி, சேலையார் அணை, பழைய வால்பாறை, வறட்டு பாறை இடங்களில் காட்டு யானைகள் கூட்டம் முகாம்மிட்டு உள்ளதால் தேயிலை பறிக்கும் செல்லும் தொழிலாளர் அச்சத்துடன் பணிக்கு செல்கின்றனர், கேரளா எல்லைகளான மளுக்குப் பாறை வழியாக இடம்பெயர்ந்துயானை கூட்டங்கள் வால்பாறை வருகின்றனர், இந்நிலையில் வறட்டுப்பாறை அரசு பள்ளி சத்துணவு கூடத்தை இடித்து தள்ளியது.இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு, பகலாகவாகன ரோந்து பணியில் ஈடுப்பட்டும் பொதுமக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் அய்யர் பாடி எஸ்டேட்டில் வரி புலி வளர்ப்பு மாடு யை அடித்து கொன்றதும், கரடி தாக்கி ஒருவரும் பலியனார், கடந்த இரண்டு நாட்கள் முன்பு சவரக் காடு பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி கூட்டம்தேயிலை தோட்ட பகுதியில் உலா வருகிறது. மேலும் ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தை புலி பசு மாட்டை அடித்து கொன்றது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில்தொடர் வன விலங்குகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.