கோயம்புத்தூரில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் வரும் உக்கடத்தில் உள்ள வாலாங்குளம் தூய்மைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், அந்தக் குளத்தில் அதிகமாகப் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இந்தப் பணிக்காக கேரளாவிலிருந்து மிதவை இயந்திரம் கொண்டுவரப்பட்டு பொக்கலின் இயந்திரங்களின் உதவியுடன் ஆகாயத் தாமரைகளை அகற்றிவருகின்றனர்.
தற்போது அப்பகுதியில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதால் வாகனங்கள் செல்ல சிறிது இடையூறு ஏற்பட்டுள்ளது.