கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "தமிழ்நாட்டில் அதிமுக அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இன்றுவரை அடிபணிந்து செயல்படுகிறது. முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் கூறும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடாது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசு மக்களின் வரி பணத்தை சுயலாபத்திற்காக வீண் செய்கின்றனர்.
முதலமைச்சர் பழனிசாமி தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் செய்தவர். வரும் தேர்தலில் வெற்றி பெற்று 2021ஆம் ஆண்டு முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்பது உறுதி. பொள்ளாச்சி பாலியல் பிரச்னையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க மனமில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது" என்றார்.
இதையும் படிங்க: பிப்.17 முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் - திமுக அறிவிப்பு