ETV Bharat / state

நாட்டு வெடி கடித்து தலை சிதறி இறந்த நாய்: இருவர் கைது - கோவை அருகே நாட்டு வெடி கடித்து நாய் உயிரிழப்பு

கோவை அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்ட அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை கடித்த நாய் தலை சிதறி பலியான சம்பவத்தில் 2 பேரை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நாட்டு வெடி
நாட்டு வெடி
author img

By

Published : Jun 30, 2021, 7:38 PM IST

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அங்கு தலை சிதறிய நிலையில் நாய் இறந்துகிடந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சோதனை மேற்கொண்டதில் ,அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை நாய் கடித்ததில் தலை சிதறியது தெரியவந்தது.

தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற இரண்டு பேரைப் பிடித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், முருகேசன் என்பதும், காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்த ஐந்து அவுட்டுக்காய்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத் துறையினர், துடியலூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து இருவர் மீது சட்டவிரோதமாக வெடி வைத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சியூர் அருகிலுள்ள கதிர் நாயக்கன்பாளையம் ரங்கசாமி என்பவரது பட்டா நிலத்தில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அங்கு தலை சிதறிய நிலையில் நாய் இறந்துகிடந்துள்ளது.

இதனையடுத்து அங்கு சோதனை மேற்கொண்டதில் ,அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை நாய் கடித்ததில் தலை சிதறியது தெரியவந்தது.

தொடர்ந்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற இரண்டு பேரைப் பிடித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், முருகேசன் என்பதும், காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்த ஐந்து அவுட்டுக்காய்களைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத் துறையினர், துடியலூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து இருவர் மீது சட்டவிரோதமாக வெடி வைத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.