ETV Bharat / state

கோவையில் கரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

author img

By

Published : Oct 9, 2020, 8:42 PM IST

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 397 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், 413 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Corona virus
Corona virus

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (அக்.7) 397 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 332ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 482ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 413 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 103ஆக அதிகரித்துள்ளது. மேலும், 4 ஆயிரத்து 746 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைவதற்கு உதவிய கரோனா!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (அக்.7) 397 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 332ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 482ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 413 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 103ஆக அதிகரித்துள்ளது. மேலும், 4 ஆயிரத்து 746 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைவதற்கு உதவிய கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.