கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று(செப் 14) 498 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்புத்தூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,662 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 448 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 18,756 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.