ETV Bharat / state

ம.பி. பெண்ணை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய கோவை இளைஞர்!

author img

By

Published : Oct 29, 2019, 11:23 PM IST

கோவை: திருமணம் செய்துகொள்ளவதாக ஆசைவார்த்தைக் கூறி மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

Coimbatore Youngster Cheated Madhya Pradesh Girl in the name of Marriage

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதிபாண்டே (31) என்ற பெண் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலைய தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவருகிறார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவரும் அதே இடத்தில் வேலை செய்துவந்துள்ளார்.

இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதித்து திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒப்புதல் அளித்ததன் காரணமாக திருமணத்திற்கு முன்னே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

ம.பி. பெண்ணை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய கோவை இளைஞர் மீது புகார்

இந்நிலையில் லட்சுமிநாராயணன் நிதிபாண்டேவை திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பணிகள் நடைபெற்றுவருவதாகவும் நிதிபாண்டேவிற்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே தன்னை ஆசைவார்த்தையால் ஏமாற்றிய லட்சுமிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் நிதிபாண்டே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்தார்.

இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிதிபாண்டே (31) என்ற பெண் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலைய தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவருகிறார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவரும் அதே இடத்தில் வேலை செய்துவந்துள்ளார்.

இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதித்து திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒப்புதல் அளித்ததன் காரணமாக திருமணத்திற்கு முன்னே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

ம.பி. பெண்ணை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றிய கோவை இளைஞர் மீது புகார்

இந்நிலையில் லட்சுமிநாராயணன் நிதிபாண்டேவை திருமணம் செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பணிகள் நடைபெற்றுவருவதாகவும் நிதிபாண்டேவிற்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே தன்னை ஆசைவார்த்தையால் ஏமாற்றிய லட்சுமிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் நிதிபாண்டே கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்மனு அளித்தார்.

இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது

Intro:மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த முடிவு. பாதிக்கப்பட்ட பெண் கோவை காவல் ஆணையரிடம் புகார்..Body:திருமணம் செய்துகொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதிபாண்டே என்ற பெண்ணை ஏமாற்றிய கோவை வாலிபர் மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதிபாண்டே(31) என்ற பெண் கத்தார் நாட்டில் உள்ள விமான நிலைய தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். கோவை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவரும் அதே இடத்தில் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டிலும் சம்மதித்து திருமணத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஒப்புதல் அளித்ததன் காரணமாக திருமணத்திற்கு முன்னே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிநாராயணன் நிதிபாண்டேவை திருமணம் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய பணிகள் மேற்கொள்ளபடுவதாகவும் நிதிபாண்டேவிற்கு தகவல்கள் வந்துள்ளன. எனவே தன்னை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய லட்சுமிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் நிதிபாண்டே கோவை காவல் ஆணையரிடம் மனு அளிக்க வந்தார். இது போன்ற சம்பவங்கள் வெறு எந்த பெண்ணிற்கும் ஏற்பட கூடாது என்றும் நிதிபாண்டே கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.