கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிவீதி கேசி தோட்டம் பகுதியில் வனஜா (70) என்பவருக்குச் சொந்தமான மாடி வீடு உள்ளது. செப்.6ஆம் தேதி மாலை பெய்த மழையால் இந்த வீடு இடிந்து விழுந்தது.
இந்த கட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை மீட்கப்பட்ட மணிகண்டன் (40) கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. மீதமுள்ள 4 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பராமரிப்பு இல்லாததால், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது - கோவை கட்டடம் இடிந்தது குறித்து எம்.எல்.ஏ தகவல்!