ETV Bharat / state

'சின்னத்தம்பி கவலைக்கிடம்' என்ற செய்தி வதந்தி - வனத்துறை

author img

By

Published : May 26, 2019, 12:06 AM IST

கோவை: சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் என்று பரவிய செய்தியில் உண்மையில்லையென வனத்தறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சின்னதம்பி

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானைக்கு ஜனவரி 25ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் பொறுத்தி, வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. உடுமலைப்பேட்டையிலிருந்து சின்னத் தம்பியை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். வனத்துறை அமைச்சரும் சின்னதம்பியை முகாமிற்கு கொண்டு செல்ல உள்ளதாக அறிவித்தார்.

ஆனால் சின்னத்தம்பிக்கான ஆதரவு மக்களிடத்தில் பெருகியது. சின்னதம்பியை வரகளியாறு கொண்டு செல்லக் கூடாது என கோவை மக்கள் வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தினர். மக்களின் போராட்டத்தை மீறி வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி. இதனைத்தொடர்ந்து கூண்டில் அடைக்கப்பட்ட சின்னதம்பியை வளர்ப்பு யானையாக மாற்றுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மக்களின் செல்லப்பிள்ளையான சின்னதம்பி தற்போது என்ன ஆனான் என்பது அதற்கு பயிற்சி அளிக்கும் பாகன்களுக்கு மட்டுமே தெரியும்.

தற்போது, சின்னதம்பிக்கு வளர்ப்பு யானைக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் முடிந்து, பாகன்கள் அதன் முதுகில் ஏறி கட்டளைகளை இடும் பயிற்சி துவங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களில் கூண்டில் இருந்து சின்னதம்பி யானை வெளியே எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து யானை பாகன்கள் கூறுகையில், 'வழக்கமாக காட்டு யானைகளை வளர்ப்பு யானையாக மாற்றுவது,எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால். சின்னத்தம்பி யானை பழக்கப்பட்ட யானைபோல் எங்களின் பேச்சை கேட்பது எங்களுக்கு மிகிழ்ச்சியாக உள்ளது.

அன்றும் இன்றும் மக்களின் பேச்சை கேட்கும் இந்த சின்னத்தம்பி எதிர்காலத்தில் ஒரு நல்ல ஒரு யானையாக வளரும். ஆரம்ப கட்ட பயிற்சிகளும் தமிழ், உருது, மலையாள பாஷைகள் மூலம் சாப்பிட கற்றுக்கொடுக்கிறோம்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும், சின்னதம்பி யானை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சின்னதம்பிக்கு பாகன்கள் பயிற்சி கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

சின்னதம்பியை பழக்கும் பாகன்
சின்னதம்பியை பழக்கும் பாகன்

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானைக்கு ஜனவரி 25ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் பொறுத்தி, வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. உடுமலைப்பேட்டையிலிருந்து சின்னத் தம்பியை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். வனத்துறை அமைச்சரும் சின்னதம்பியை முகாமிற்கு கொண்டு செல்ல உள்ளதாக அறிவித்தார்.

ஆனால் சின்னத்தம்பிக்கான ஆதரவு மக்களிடத்தில் பெருகியது. சின்னதம்பியை வரகளியாறு கொண்டு செல்லக் கூடாது என கோவை மக்கள் வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தினர். மக்களின் போராட்டத்தை மீறி வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டான் சின்னத்தம்பி. இதனைத்தொடர்ந்து கூண்டில் அடைக்கப்பட்ட சின்னதம்பியை வளர்ப்பு யானையாக மாற்றுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மக்களின் செல்லப்பிள்ளையான சின்னதம்பி தற்போது என்ன ஆனான் என்பது அதற்கு பயிற்சி அளிக்கும் பாகன்களுக்கு மட்டுமே தெரியும்.

தற்போது, சின்னதம்பிக்கு வளர்ப்பு யானைக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் முடிந்து, பாகன்கள் அதன் முதுகில் ஏறி கட்டளைகளை இடும் பயிற்சி துவங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களில் கூண்டில் இருந்து சின்னதம்பி யானை வெளியே எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து யானை பாகன்கள் கூறுகையில், 'வழக்கமாக காட்டு யானைகளை வளர்ப்பு யானையாக மாற்றுவது,எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால். சின்னத்தம்பி யானை பழக்கப்பட்ட யானைபோல் எங்களின் பேச்சை கேட்பது எங்களுக்கு மிகிழ்ச்சியாக உள்ளது.

அன்றும் இன்றும் மக்களின் பேச்சை கேட்கும் இந்த சின்னத்தம்பி எதிர்காலத்தில் ஒரு நல்ல ஒரு யானையாக வளரும். ஆரம்ப கட்ட பயிற்சிகளும் தமிழ், உருது, மலையாள பாஷைகள் மூலம் சாப்பிட கற்றுக்கொடுக்கிறோம்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும், சின்னதம்பி யானை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சின்னதம்பிக்கு பாகன்கள் பயிற்சி கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

சின்னதம்பியை பழக்கும் பாகன்
சின்னதம்பியை பழக்கும் பாகன்
சு.சீனிவாசன்- முத்துக்குமார்-    கோவை

 சொன்ன சொல்லுக்கு கட்டுப்படும் சின்னதம்பி யானை,எங்களுக்கும் செல்லப்பிள்ளை "சின்னதம்பி " குறித்து நெகிழும் பாகன்கள்...



கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் கடந்த 18 வருடங்களாக சுற்றித்திரிந்த இரண்டு ஒற்றை காட்டு யானைகளை சின்னத்தம்பி, விநாயகன் என பெயரிட்டு அப்பகுதி மக்கள் அழைத்துவந்தனர். மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இரண்டு மற்ற யானைகளும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாய பயிர்களை சாப்பிடுவதும் அங்கு உள்ள நீர்நிலைகளில்
தண்ணீர் குடிப்பது என நாள்தோறும் தொடர்ந்து வந்த நிலையில், மாலை நேரத்தில் வெளிவரும் இந்த இரண்டு யானைகள் பொதுமக்கள் யாரையும் தாக்கியது இல்லை,18 வருடங்களாக அந்த பகுதியில் இருந்ததால் அங்குள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரு யானைகளையும் செல்ல பிள்ளைகளாகவே பாவித்து வந்தனர்.ஊருக்குள் வந்தால் அங்கே போகாதே, பயிர்களை சேதம் செய்யாதே என அன்பு கட்டளை இடுவர், இதன் ஒரு புறம் இருக்க யானை வலசை பாதையில் ஆக்கிரமிப்பு செய்த செங்கல் சூளை அதிபர்களின் சூழ்ச்சியால்  இரு யானைகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள்  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டம் மேற்கொண்டர். அதன் விளைவாக டிசம்பர் மாதம் 18ஆம் தேதி விநாயகன் என்ற ஒற்றை காட்டு யானை தடாகம் வனப்பகுதியில் பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. இதனை தொடர்ந்து மற்றொரு  யானையான  சின்னத்தம்பி பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து ஜனவரி 25ஆம் தேதி சின்னத்தம்பி யானைக்கு  மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் பொறுத்தப்பட்டு, வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. சில நாட்கள் ஆன நிலையில் மீண்டும் தன்னுடைய வாழ்விடத்தை தேடி சின்னத்தம்பி மலைப்பகுதியில் இருந்து கீழே வந்து நடக்கத் துவங்கினான், நூறு கிலோமீட்டர்கள் மேலாக பயணித்து உடுமலைப்பேட்டைக்கு இறுதியாக வந்து சேர்ந்தான். வழியில் பல்வேறு கிராமங்களை நகரங்களை கடந்தாலும் அவனால் எந்தவொரு சிறு சேதமும் ஏற்படவில்லை வழியில் ஓரிடத்தில் "குழந்தையுடன் நேரில் வந்த பெண்மணியை கண்டு சின்னத்தம்பி விலகிப்போன காட்சி" மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்களில் அமைதியாக சென்றது, அப்பகுதியில் இருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ,இந்த காட்சிகள் சமூக வளை தளத்தில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சின்னத்தம்பிக்கு மக்களின் ஆதரவு கடல் கடந்தும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, சமூக வளை தளங்களில் சின்னதம்பி க்கு ஆதரவாக குரல்கள் அதிக அளவில் எழுந்தன.

விளை நிலங்களை சேதப்படுத்துவதால்  உடுமலைப்பேட்டையிலிருந்து சின்னத் தம்பியை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். வனத்துறை அமைச்சரும் சின்னதம்பியை முகாமிற்கு கொண்டு செல்ல உள்ளதாக அறிவித்தார்.இதனிடையே சின்னத்தம்பி யானை  மீண்டும் தடாகம் வனப்பகுதிக்கு  கொண்டுவர வேண்டும்,முகாமிற்கு கொண்டு செல்லக்கூடாது என வலியுறுத்தி  கோவையை சார்ந்த  இளைஞர்கள், பொதுமக்கள், பழங்குடியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதல் கட்டமாக சின்னத்தம்பி யானையை வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியது, அதைத்தொடர்ந்து சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டு மீண்டும் வரகளியாறு யானைகள் முகாம் கொண்டுவரப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது. அந்த யானையை வளர்ப்பு யானையாக மாற்றுவதாக வனத்துறையினர் அறிவித்தனர் .அதன்படி வளர்ப்பு யானைக்கான ஆரம்ப கட்ட  பயிற்சிகள் தற்போது முடிந்து உணவு வாங்கி சாப்பிடுவது எவ்வாறு உணவுகளை எடுக்கவேண்டும் என்பது குறித்து  பாகன்கள்  மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் அதன் முதுகில் ஏறி கட்டளைகளை பாகன்கள் இடும் பயிற்சி துவங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களில் கூண்டில் இருந்து சின்னதம்பி யானை வெளியே எடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து யானை பாகன்கள் கூறுகையில் சின்னத்தம்பி யானையைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம், உடுமலைப்பேட்டையில் இருக்கும் போது நேரிலும் பார்த்திருக்கிறோம் அதன் குணம் வித்தியாசமானது, மற்ற காட்டு யானைகளில் இருந்து வேறுபட்டு உள்ளது. எந்த ஒரு சூழலிலும் பொதுமக்களை இந்த யானை தாக்க முயற்சி செய்யவில்லை பொதுமக்கள் கூறுவதை கேட்டு அந்த யானை நடந்து கொள்வதாக எங்களுக்கு தோன்றியது ,தற்போது கூண்டில் வைக்கப்பட்டுள்ள இந்த யானை எங்களுடைய பேச்சை கேட்டு நாங்கள் சொல்லும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்கிறது அதற்கு தற்போது எங்கள் கைகளால் உணவை வழங்கி வருகிறோம்.தடாகம்  பகுதியில் எப்படி மக்களின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்ததோ அதேபோல் தற்போது எங்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்கிறது. அன்றும் இன்றும் மக்களின் பேச்சை கேட்கும் இந்த சின்னத்தம்பி எதிர்காலத்தில் ஒரு நல்ல ஒரு யானையாக வளரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். வழக்கமாக காட்டு யானைகளை வளர்ப்பு யானையாக மாற்றுவது,எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும்,ஆனால் இந்த சின்னத்தம்பி யானை பழக்கப்பட்ட  யானைபோல் எங்களின் பேச்சை கேட்பது எங்களுக்கு மிகிழ்ச்சியாக உள்ளது. தற்போது எங்களின் பேச்சை கேட்டு உணவை எடுத்து உண்பது, நாங்கள் கொடுக்கும் உணவை வாங்குவது என ஆரம்ப கட்ட பயிற்சிகளும் தமிழ்,உருது,மலையாள பாசைகள் மூலம் சாப்பிட கற்றுக்கொடுப்பதாகவும்,  தெரிவித்துள்ளனர்.


வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் சின்னத்தம்பி யானை  தற்போது நன்றாக உள்ளதாகவும், அதன் எடை ஏதும் குறைவில்லை வனத்தில் இருக்கும் போது எப்படி இருந்ததோ அதேபோல் தற்போது உள்ளது. வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் வழஙருகப்படுவதாகவும், மருத்துவ பரிசோதனை வாரத்திற்கு இரண்டு முறை நடைபெறுகிறது என தெரிவித்தனர்.தடாகம் மக்களை மட்டுமல்ல டாப்சிலிப் மக்களையும் விரைவில் நண்பர்களாக்குவான் இந்த "சின்னதம்பி "

எல்லோரையும் கவர்ந்த சின்னதம்பி சமூகத்திற்கு சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் எங்களின் வலசை பாதையை கொடுங்கள் வனத்திலேயே எங்கள் உறவினர்களை வாழ விடுங்கள் என்பதே....

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.