ETV Bharat / state

"குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறாவிட்டால் கடையடைப்பு போராட்டம்" - ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள்!

author img

By

Published : Dec 17, 2019, 3:10 PM IST

கோவை: குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள் எச்சரித்துள்ளன.

caa should cancel
ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகளின் செய்தியாளர் சந்திப்பு பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அதில், ' குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று கடையடைப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்எம்கே போன்ற பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் சமம் என்றும், அதை மதத்தின் வீதியால் யாரும் பிரிக்கக் கூடாது.

அண்டை நாடுகளிலிருந்து வாழ்வாதாரத்திற்காக குடிபெயரும் மக்களில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெறாவிட்டால், வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே கடைகள், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தைத் தொடங்கி விடுவோம்' இவ்வாறு தெரிவித்தார்.

ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகளின் செய்தியாளர் சந்திப்பு பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அதில், ' குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று கடையடைப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். இதில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எம்எம்கே போன்ற பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் சமம் என்றும், அதை மதத்தின் வீதியால் யாரும் பிரிக்கக் கூடாது.

அண்டை நாடுகளிலிருந்து வாழ்வாதாரத்திற்காக குடிபெயரும் மக்களில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுவது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெறாவிட்டால், வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே கடைகள், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தைத் தொடங்கி விடுவோம்' இவ்வாறு தெரிவித்தார்.

ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்!

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் இல்லையெனில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும். கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்


Body:கோவை பிரஸ் கிளப்பில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய அமைப்புகளின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

இதில் பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார் இதில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம் எம் கே போன்ற பலரும் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

அந்த கடையடைப்பு போராட்டம் என்பது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நடக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆனது அனைத்து மக்களுக்கும் சமம் என்றும் அதை மதத்தின் வீதியால் யாரும் பிரிக்க கூடாது என்றும் உள்ளது என்று கூறினார் அப்படியிருக்க தற்போது குடியுரிமை சட்ட மசோதாவில் அண்டை நாடுகளிலிருந்து வாழ்வாதாரத்திற்காக குடிபெயரும் மக்களில் முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது கண்டனத்திற்கு உரியது என்று கூறினார். இந்த நேரத்தில் மத்திய அரசு இடம் தான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் அது என்னவென்றால் அண்டை நாடுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு குடிபெயரும் மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென்றால் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் ஆனால் தற்போது உள்ள மசோதாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்

வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று காலை முதலே கடைகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தைத் துவக்கி விடுவோம் என்று தெரிவித்தார் இதற்கு சிறு கடை வியாபாரிகள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.