கோவை: பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரையானது தொடங்கவுள்ளது. இதனை ஆதரிக்கும்வகையில் பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளர் பிரீத்தி லக்ஷ்மி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி இன்று கோவையில் நடத்தப்பட்டது.

கணுவாயிலிருந்து பிரசித்திப்பெற்ற மருதமலை முருகன் கோயில்வரை இந்தப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'கடவுளை கொச்சைப்படுத்துவது தான் ஸ்டாலினின் வேலை' - பொன்.ராதாகிருஷ்ணன்