கோயம்புத்தூர் மாவட்டம் ஹோப் கல்லூரி அருகே, "கரோனா இல்லாதவர்களுக்கு கரோனா என்று கூறி அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகள்" என்று ஒரு குடும்பத்தினர் பேனர் வைத்தனர்.
இதனால், சிங்காநல்லூர் காவல் துறையினர் அந்தக் குடும்பத்தினர் இளவரசன், ரோஜா ஆகியோர் மீது அனுமதியின்றி பேனர் வைத்தல், நோய்ப்பரப்புதல், மாநகராட்சி நிர்வாகம் மீது அவதூறு பரப்புதல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.