ETV Bharat / state

கோவை சரக காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை!

author img

By

Published : Jul 8, 2023, 1:44 PM IST

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் கோவை சரக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Law and order ADGP Arun consultation with Coimbatore range police officers regarding of the DIG vijayakumar suicide
கோவை சரக காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை
கோவை சரக காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை

கோயம்புத்தூர்: மேற்கு மண்டல டிஐஜி விஜயகுமார் நேற்று காலை 7 மணி அளவில் அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பதவியேற்று முதன்முறையாக முதன் முறையாக கோவை வந்துள்ள அருண் நேற்று டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து இன்று கோவை சரக காவல் துறை அதிகாரிகளுடன், மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டத்திலுள்ள சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள், காவல் துறையின் செயல்பாடுகள், களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், டிஐஜி தற்கொலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக்கூட்டத்தில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர், கோவை, திருப்பூர் மாநகர ஆணையர்கள், துணை ஆணையர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்ட
கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு ஏடிஜிபி அருண், தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே டிஜஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக ஆயுதப்படை காவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலரான ரவிச்சந்திரன் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கோவை சரக டிஐஜி-யின் தனிப்பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருவதாகவும், அவரின் பாதுகாப்பு அலுவலுக்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டு இருந்ததது.

டிஐஜி விஜயகுமார் கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொள்வார். நேற்று (ஜூலை 7) காலை 6.30 மணிக்கு DSR பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பால் வாங்கி குடித்து விட்டு, ரவிச்சந்திரன் தங்கியிருந்த அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்துவது என டிஐஜி விஜயகுமார் கேட்டவாறே அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு ரவிச்சந்திரனும், முகாம் அலுவலக வாகன ஓட்டிநர் அன்பழகன் என்பவரும் ஓடி சென்று பார்த்த போது, தலையில் ரத்த காயத்துடன் டிஐஜி விஜயகுமார் கீழே விழுந்து கிடந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: DIG Vijayakumar Suicide: முகாம் அலுவலகத்தில் என்ன நடந்தது? பாதுகாவலர் அளித்த புகார் என்ன?

கோவை சரக காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை

கோயம்புத்தூர்: மேற்கு மண்டல டிஐஜி விஜயகுமார் நேற்று காலை 7 மணி அளவில் அவரது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பணி சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் எனவும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பதவியேற்று முதன்முறையாக முதன் முறையாக கோவை வந்துள்ள அருண் நேற்று டிஐஜி விஜயகுமாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து இன்று கோவை சரக காவல் துறை அதிகாரிகளுடன், மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டத்திலுள்ள சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள், காவல் துறையின் செயல்பாடுகள், களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், டிஐஜி தற்கொலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக்கூட்டத்தில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர், கோவை, திருப்பூர் மாநகர ஆணையர்கள், துணை ஆணையர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்ட
கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு ஏடிஜிபி அருண், தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே டிஜஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக ஆயுதப்படை காவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலரான ரவிச்சந்திரன் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கோவை சரக டிஐஜி-யின் தனிப்பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருவதாகவும், அவரின் பாதுகாப்பு அலுவலுக்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டு இருந்ததது.

டிஐஜி விஜயகுமார் கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுத்துக்கொள்வார். நேற்று (ஜூலை 7) காலை 6.30 மணிக்கு DSR பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது பால் வாங்கி குடித்து விட்டு, ரவிச்சந்திரன் தங்கியிருந்த அறையில் இருந்த துப்பாக்கியை எடுத்து எப்படி பயன்படுத்துவது என டிஐஜி விஜயகுமார் கேட்டவாறே அறையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு ரவிச்சந்திரனும், முகாம் அலுவலக வாகன ஓட்டிநர் அன்பழகன் என்பவரும் ஓடி சென்று பார்த்த போது, தலையில் ரத்த காயத்துடன் டிஐஜி விஜயகுமார் கீழே விழுந்து கிடந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: DIG Vijayakumar Suicide: முகாம் அலுவலகத்தில் என்ன நடந்தது? பாதுகாவலர் அளித்த புகார் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.