ETV Bharat / state

ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுத்து: தன்னம்பிக்கை மாணவி தனுவர்ஷா! - latest coimbatore district news tamil

கோவை: தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி தனுவர்ஷா ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் அசத்தி வருகிறார்.

தன்னம்பிக்கை மாணவி தனுவர்ஷா
author img

By

Published : Oct 11, 2019, 6:39 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் செந்தில்வேல், செல்வி தம்பதியரின் மகள் தனுவர்ஷா. தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை நுண்ணுயிரியல் படித்து வரும் இவர், ஆறு வயதிலிருந்தே இரண்டு கைகளிலும் எழுதும் பழக்கமுடையவர்.

ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதும் கல்லூரி மாணவி

இந்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதுவதற்கு பழக வேண்டும் என்ற ஆர்வத்தில் சில ஆண்டுகளாக அதற்கான பயிற்சியையும் தொடங்கியுள்ளார். தற்போது மாணவி தனுவர்ஷா இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் அசத்தி வருகிறார்.

மேலும் இவர், தன்னுடைய திறமை குறித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு என்ற நிறுவனத்தில் இணையம் வழியாக விண்ணப்பிக்கவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்று சாதனை பட்டியலில் இடம்பெறுவேன் என்றும் தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.

இதையும் படியுங்க:

கீழடி களத்தில் புதிய வரலாறு படைக்கும் தொல்லியல் மாணவிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் செந்தில்வேல், செல்வி தம்பதியரின் மகள் தனுவர்ஷா. தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை நுண்ணுயிரியல் படித்து வரும் இவர், ஆறு வயதிலிருந்தே இரண்டு கைகளிலும் எழுதும் பழக்கமுடையவர்.

ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதும் கல்லூரி மாணவி

இந்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதுவதற்கு பழக வேண்டும் என்ற ஆர்வத்தில் சில ஆண்டுகளாக அதற்கான பயிற்சியையும் தொடங்கியுள்ளார். தற்போது மாணவி தனுவர்ஷா இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் அசத்தி வருகிறார்.

மேலும் இவர், தன்னுடைய திறமை குறித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு என்ற நிறுவனத்தில் இணையம் வழியாக விண்ணப்பிக்கவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்று சாதனை பட்டியலில் இடம்பெறுவேன் என்றும் தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.

இதையும் படியுங்க:

கீழடி களத்தில் புதிய வரலாறு படைக்கும் தொல்லியல் மாணவிகள்

Intro:artBody:artConclusion:பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒரே நேரத்தில் இரு கைகளில் மூன்று மொழிகள் மற்றும் ஓவியம் வரைந்து அசத்தல்

பொள்ளாச்சி அக்டோபர் : 11

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் செந்தில்வேல் செல்வி தம்பதியரின் மகள் தனுவர்ஷா கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை நுண்ணுயியல் படித்து வருகின்றார். இப்பெண்ணுக்கு ஆறு வயதிலிருந்தே இருக்கையில் தனித்தனியாக எழுதும் பழக்கம் இருந்து வந்த நிலையில் ஒரே நேரத்தில் எழுதும் பழக்கத்தை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் சில ஆண்டுகளாக இரு கைகளில் ஒரே நேரத்தில் எழுதும் பயிற்சியை தொடங்கியுள்ளார். தற்போது தனுவர்ஷா இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ஓவியம் போன்றவற்றை வரைந்து அசத்தி வருகிறார். இது சம்பந்தமாக இணையதளத்தில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு என்ற நிறுவனத்தில் விண்ணப்பித்து அந்நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்டதாகவும் இது சம்பந்தமாக சில வீடியோ ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதன் பின் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதற்கான முயற்சிகள் தற்போது எடுத்து வருகின்றார். அதன்பின் வெற்றி பெற்று சாதனை பட்டியலில் இடம்பெரும் என்றும் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.