ETV Bharat / state

பொள்ளாச்சியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - கேரளாவிற்கு அரிசி கடத்தல்

கோவை: பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு டன் நியாயவிலைக் கடை அரிசி, மினி லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

4 tonne ration rice seized
4 tonne ration rice seized
author img

By

Published : Nov 11, 2020, 10:14 AM IST

பொள்ளாச்சி அடுத்துள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியிலிருந்து ஆனைமலை செல்லும் வழியில் தனி வட்டாட்சியர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக கேரளப் பதிவு எண் கொண்ட மினி லாரி, அவ்வழியாக வந்ததை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

வாகனத்தில் 50 கிலோ கொண்ட 80 மூட்டைகளில், நான்காயிரம் கிலோ அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தை ஓட்டிவந்த கருப்புசாமி என்பவரிடம், வட்டாட்சியர் விசாரணை நடத்தியதில் வேட்டைக்காரன்புதூர் பகுதியிலிருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி கடத்திச் செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மினி லாரியும் ஓட்டுநரான கருப்பசாமி பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பொள்ளாச்சி அடுத்துள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியிலிருந்து ஆனைமலை செல்லும் வழியில் தனி வட்டாட்சியர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக கேரளப் பதிவு எண் கொண்ட மினி லாரி, அவ்வழியாக வந்ததை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

வாகனத்தில் 50 கிலோ கொண்ட 80 மூட்டைகளில், நான்காயிரம் கிலோ அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தை ஓட்டிவந்த கருப்புசாமி என்பவரிடம், வட்டாட்சியர் விசாரணை நடத்தியதில் வேட்டைக்காரன்புதூர் பகுதியிலிருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி கடத்திச் செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து மினி லாரியும் ஓட்டுநரான கருப்பசாமி பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.