ETV Bharat / state

என்று தணியும் ரீல்ஸ் மோகம் - ரீல்ஸ் பதிவிட்டு லைக்ஸ் வாங்குவதற்காக பைக் திருடிய இளைஞர்கள் கைது!

author img

By

Published : Mar 23, 2023, 4:09 PM IST

இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் ஆகியவற்றில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ் வாங்குவதற்காக அதிவேக இருசக்கர வாகனங்களைத் திருடிய இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில், தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும், மீண்டும் மறுநாள் காலை வாகனத்தை எடுக்க வந்தபோது திருடு போய்விட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதேபோன்று பல இருசக்கர வாகனங்கள் திருடு போவதாகத் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதேபோன்று, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் திருடுபோன வழக்குத் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் ஓட்டேரியைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன் சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, எட்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணை மேற்கொண்டதில் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் ஆகிய வீடியோக்களில் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பலரும் அதிக லைக்குகள் வாங்குவதாகவும், அதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆவதற்காக அதி வேகமாக செல்லும் வாகனங்களைத் திருடி சாகசமாக ஓட்டி வீடியோ பதிவிட்டு வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

மேலும், ‘flowers road kolaru’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இதுபோன்று பல வீடியோக்களை திருட்டு பைக்கில் அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்து வீடியோக்களையும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பாலா என்கிற பாலமுருகன் ‘swiggy’ டெலிவரி ஊழியராக வேலை பார்த்துக்கொண்டே, இந்த இருசக்கர வாகனத் திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருடும் உயர் ரக இருசக்கர வாகங்களை வைத்து ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் சாகச வீடியோக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

காவல் துறையினர், திருட்டு வாகனத்தைப் பிடிக்காமல் இருப்பதற்காக, ஓஎல்எக்ஸ் போன்ற இருசக்கர வாகனங்கள் விற்பனை இணையதளத்தில் திருடிய இருசக்கர வாகனத்தைப் போன்ற விளம்பரங்களைப் பார்த்து, உரிமையாளரிடம் பைக் வாங்குவது போல் பேசுவதாகவும், அந்த இருசக்கர வாகனத்தின் ஆர்சி புக் போன்ற ஆவணங்களை ஜெராக்ஸ் வாங்கிக்கொண்டு, அந்த வாகன எண்ணையே நம்பர் பிளேட் தயாரித்து திருட்டு வாகனத்தில் பொருத்தி, பயன்படுத்துவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் திருடப்பட்ட அதிவேக இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் விற்பனை செய்யாமல் நண்பர்களுக்கு இதுபோன்று நம்பர் பிளேட் மாட்டிக்கொடுத்து, இலவசமாக கொடுத்து விடுவதையும் வாடிக்கையாக கொண்டது தெரியவந்துள்ளது. இவ்வாறாக அதிவேக விளைவு உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி சாகச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து லைக்குகள் அதிகமாக வாங்குவதை நண்பர்களுடன் கெத்தாக காட்டிக் கொள்வதை நூதன பழக்கமாக பாலா வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவேளை காவல் துறையினர், சோதனையின் போது ஒரிஜினல் ஆர்சி புக் கேட்கும்போது, வீட்டில் இருப்பதாகக் கூறி அந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுச்சென்று தப்பிச்சென்று விடுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலா மட்டும் சோமேஷிடம் திருட்டு வாகனத்தை வாங்கி, பயன்படுத்தி வரும் நண்பர்கள் குறித்தும் காவல் துறையினர் பட்டியலெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக வேறு யாரேனும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் நண்பர்கள் ஐந்து பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வீடியோக்களில் லைக்ஸ் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

சென்னை: கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில், தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும், மீண்டும் மறுநாள் காலை வாகனத்தை எடுக்க வந்தபோது திருடு போய்விட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதேபோன்று பல இருசக்கர வாகனங்கள் திருடு போவதாகத் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதேபோன்று, விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் திருடுபோன வழக்குத் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் ஓட்டேரியைச் சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன் சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, எட்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணை மேற்கொண்டதில் யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் ஆகிய வீடியோக்களில் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பலரும் அதிக லைக்குகள் வாங்குவதாகவும், அதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆவதற்காக அதி வேகமாக செல்லும் வாகனங்களைத் திருடி சாகசமாக ஓட்டி வீடியோ பதிவிட்டு வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

மேலும், ‘flowers road kolaru’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இதுபோன்று பல வீடியோக்களை திருட்டு பைக்கில் அதிவேகமாக ஓட்டி சாகசம் செய்து வீடியோக்களையும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பாலா என்கிற பாலமுருகன் ‘swiggy’ டெலிவரி ஊழியராக வேலை பார்த்துக்கொண்டே, இந்த இருசக்கர வாகனத் திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருடும் உயர் ரக இருசக்கர வாகங்களை வைத்து ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் சாகச வீடியோக்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

காவல் துறையினர், திருட்டு வாகனத்தைப் பிடிக்காமல் இருப்பதற்காக, ஓஎல்எக்ஸ் போன்ற இருசக்கர வாகனங்கள் விற்பனை இணையதளத்தில் திருடிய இருசக்கர வாகனத்தைப் போன்ற விளம்பரங்களைப் பார்த்து, உரிமையாளரிடம் பைக் வாங்குவது போல் பேசுவதாகவும், அந்த இருசக்கர வாகனத்தின் ஆர்சி புக் போன்ற ஆவணங்களை ஜெராக்ஸ் வாங்கிக்கொண்டு, அந்த வாகன எண்ணையே நம்பர் பிளேட் தயாரித்து திருட்டு வாகனத்தில் பொருத்தி, பயன்படுத்துவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் திருடப்பட்ட அதிவேக இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் விற்பனை செய்யாமல் நண்பர்களுக்கு இதுபோன்று நம்பர் பிளேட் மாட்டிக்கொடுத்து, இலவசமாக கொடுத்து விடுவதையும் வாடிக்கையாக கொண்டது தெரியவந்துள்ளது. இவ்வாறாக அதிவேக விளைவு உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி சாகச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்து லைக்குகள் அதிகமாக வாங்குவதை நண்பர்களுடன் கெத்தாக காட்டிக் கொள்வதை நூதன பழக்கமாக பாலா வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒருவேளை காவல் துறையினர், சோதனையின் போது ஒரிஜினல் ஆர்சி புக் கேட்கும்போது, வீட்டில் இருப்பதாகக் கூறி அந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுச்சென்று தப்பிச்சென்று விடுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலா மட்டும் சோமேஷிடம் திருட்டு வாகனத்தை வாங்கி, பயன்படுத்தி வரும் நண்பர்கள் குறித்தும் காவல் துறையினர் பட்டியலெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக வேறு யாரேனும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் நண்பர்கள் ஐந்து பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வீடியோக்களில் லைக்ஸ் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.