ETV Bharat / state

கழிவு நீரை சுத்தம் செய்த இளைஞர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு! - கழிவு நீரை சுத்தம் செய்த இளைஞர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

சென்னை: பிரபல தனியார் வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷவாயு தாக்கி உயிரிழந்த இளைஞர்
author img

By

Published : Nov 12, 2019, 12:49 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியிடம் நிர்வாகம் கூறியது.

அதற்கு அவர் அருண் குமார்,ரஞ்சித் குமார்,யுவராஜ்,அஜித் குமார்,ஸ்ரீநாத் ஆகிய ஐந்து பேரை சுத்தம் செய்ய அங்கு அனுப்பியுள்ளார். அப்போது, ரஞ்சித் குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக அவருடய அண்ணன் அருண் குமார் கழிவு நீர் தொட்டியின் கீழே இறங்கி மயக்கமடைந்த தம்பியை மீட்டார். பிறகு ரஞ்சித்தை காப்பாற்றச் சென்ற அருண்குமாரும் விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, அண்ணா சாலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அருண்குமாரின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மயக்கமடைந்த ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மேலும், இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணா சாலை காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவைத்த வணிகவளாக அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பியை காப்பாற்றச் சென்ற அண்ணன் உயிரை பறிகொடுத்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விஷ வாயு தாக்கி வட இந்திய இளைஞர்கள் பலி...!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியிடம் நிர்வாகம் கூறியது.

அதற்கு அவர் அருண் குமார்,ரஞ்சித் குமார்,யுவராஜ்,அஜித் குமார்,ஸ்ரீநாத் ஆகிய ஐந்து பேரை சுத்தம் செய்ய அங்கு அனுப்பியுள்ளார். அப்போது, ரஞ்சித் குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக அவருடய அண்ணன் அருண் குமார் கழிவு நீர் தொட்டியின் கீழே இறங்கி மயக்கமடைந்த தம்பியை மீட்டார். பிறகு ரஞ்சித்தை காப்பாற்றச் சென்ற அருண்குமாரும் விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, அண்ணா சாலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, அருண்குமாரின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மயக்கமடைந்த ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மேலும், இந்நிகழ்வு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணா சாலை காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யவைத்த வணிகவளாக அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பியை காப்பாற்றச் சென்ற அண்ணன் உயிரை பறிகொடுத்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விஷ வாயு தாக்கி வட இந்திய இளைஞர்கள் பலி...!

Intro:Body:கழிவு நீரை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி..

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் கீழ்த்தளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண் குமார்,ரஞ்சித் குமார்(25),யுவராஜ்,அஜித் குமார்,ஸ்ரீநாத் ஆகிய 5நபரை சுத்தம் செய்ய அனுப்பியுள்ளார். அப்போது ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் கழிவு தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.உடனே ரஞ்சித் குமார் மற்றும் அருண் குமார் ஆகியோர் கழிவு நீர் தொட்டியில் கீழே இறங்கி மயக்கமடைந்த ரஞ்சித் குமாரை மீட்டனர்.ஆனால் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்ததுள்ளது.இதனையடுத்து அண்ணா சாலை போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரஞ்சித் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து அண்ணா சாலை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.