ETV Bharat / state

ஆவடியில் தரம்புரண்ட ரயில் 10 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Avadi Train Accident: ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று தண்டவாள தடத்தில் ரயிலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 9:40 PM IST

ஆவடியில் தடம் புரண்ட மின்சார ரயில்
ஆவடியில் தடம் புரண்ட மின்சார ரயில்

சென்னை: ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில், பயணிகள் இல்லாமல் காலை 5.40 மணி அளவில் ஆவடி 3-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால், சிக்னலைக் கடந்து 200 மீட்டர் தொலைவில், அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் இருப்புப்பாதையில் ரயிலானது தடம் புரண்டது.

அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக, ஆவடி - சென்னை மார்க்கத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட வந்தே பாரத் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சென்னை செல்ல வேண்டிய அனைத்து புறநகர் ரயில்களும் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகச் சென்றது.

முன்னதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஆவடி மின்சார ரயில் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது, ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத், சதாப்தி ரயில்கள், கோவை செல்லும் விரைவு ரயில் என 5 மின்சார ரயில்கள் தாமதமாகச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த ரயில்கள் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சரிசெய்து பின்பு இயக்கப்பட்டதாகவும், இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சப்தகிரி, பிருந்தாவனம், டபுள் டக்கர் விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அதைத் தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர், உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தீவிரமாக பணிகள் நடைபெற்று வந்தது.

இதில், தடம் புரண்ட ரயிலை ஹைட்ராலிக் ஜாக்கி கொண்டு தூக்கி, தண்டவாள பக்கவாட்டில் வைத்து பெரிய என்ஜின் கொண்டு, அண்ணனூர் ரயில்வே பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். மின்கம்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கு உள்ளான தண்டவாள தடத்தில் ரயிலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டது - 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில், பயணிகள் இல்லாமல் காலை 5.40 மணி அளவில் ஆவடி 3-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால், சிக்னலைக் கடந்து 200 மீட்டர் தொலைவில், அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் இருப்புப்பாதையில் ரயிலானது தடம் புரண்டது.

அதிர்ஷ்டவசமாக ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக, ஆவடி - சென்னை மார்க்கத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட வந்தே பாரத் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், சென்னை செல்ல வேண்டிய அனைத்து புறநகர் ரயில்களும் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகச் சென்றது.

முன்னதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஆவடி மின்சார ரயில் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது, ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத், சதாப்தி ரயில்கள், கோவை செல்லும் விரைவு ரயில் என 5 மின்சார ரயில்கள் தாமதமாகச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த ரயில்கள் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சரிசெய்து பின்பு இயக்கப்பட்டதாகவும், இதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சப்தகிரி, பிருந்தாவனம், டபுள் டக்கர் விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அதைத் தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர், உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தீவிரமாக பணிகள் நடைபெற்று வந்தது.

இதில், தடம் புரண்ட ரயிலை ஹைட்ராலிக் ஜாக்கி கொண்டு தூக்கி, தண்டவாள பக்கவாட்டில் வைத்து பெரிய என்ஜின் கொண்டு, அண்ணனூர் ரயில்வே பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். மின்கம்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கு உள்ளான தண்டவாள தடத்தில் ரயிலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டது - 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.