ETV Bharat / state

மது போதையில் இருந்த கணவனின் கையை பிடித்து தண்டவாளத்தை கடக்க முயற்சி...ரயில் மோதியதில் மனைவி பலி

author img

By

Published : Nov 9, 2022, 9:18 AM IST

Updated : Nov 9, 2022, 12:00 PM IST

பல்லாவரம் அடுத்த திரிசூலம் இரயில் நிலையத்தில் மது போதையில் இருந்த கணவனின் கையை பிடித்து தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மது போதையில் இருந்த கணவனின் கையை பிடித்து தண்டவாளத்தை கடக்க முயற்சி.
மது போதையில் இருந்த கணவனின் கையை பிடித்து தண்டவாளத்தை கடக்க முயற்சி.சம்பவ இடத்திலேயே

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத்(வயது-45). இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி (40) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் பெண் ஒருவருக்கு சீமந்தம் நிகழ்ச்சி நடைபெறவே அதில் கலந்து கொள்வதற்காக இரயிலில் திரிசூலம் சென்றுள்ளனர்.

அப்போது சம்பத் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானம் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை, மனைவி கலைச்செல்வி கையை பிடித்து தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டார்.அப்போது மனைவியுடன் செல்ல மறுத்த சம்பத் அவரது கையை உதறியுள்ளார்.

இதில் நிலை குலைந்த கலைச்செல்வி மீது அந்த வழியாக சென்ற இரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் பலமாக மோதியது. படுகாயமடைந்த கலைச்செல்வி கணவன் கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :முதலில் வாங்கிய கடனை தாருங்கள்...பின்னர் நிகழ்ச்சி நடத்தலாம்..

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத்(வயது-45). இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி (40) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் திரிசூலம் பகுதியில் அமைந்துள்ள தனது உறவினர் பெண் ஒருவருக்கு சீமந்தம் நிகழ்ச்சி நடைபெறவே அதில் கலந்து கொள்வதற்காக இரயிலில் திரிசூலம் சென்றுள்ளனர்.

அப்போது சம்பத் அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிதானம் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்த அவரை, மனைவி கலைச்செல்வி கையை பிடித்து தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டார்.அப்போது மனைவியுடன் செல்ல மறுத்த சம்பத் அவரது கையை உதறியுள்ளார்.

இதில் நிலை குலைந்த கலைச்செல்வி மீது அந்த வழியாக சென்ற இரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் பலமாக மோதியது. படுகாயமடைந்த கலைச்செல்வி கணவன் கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :முதலில் வாங்கிய கடனை தாருங்கள்...பின்னர் நிகழ்ச்சி நடத்தலாம்..

Last Updated : Nov 9, 2022, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.