ETV Bharat / state

6 மாதமாக கொடுமை செய்த கணவன்: மனைவி புகார்

author img

By

Published : Aug 12, 2021, 9:24 AM IST

தன்னை ஆறு மாதங்களாக கொடுமை செய்ததாக கூறி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணைத் தலைவராக பணிபுரியும் கணவர் மீது அவரது மனைவி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

chennai stanley hospital  chennai news  chennai latest news  crime news  complaint against on stanley hospital doctor  சென்னை செய்திகள்  கணவன் மீது மனைவி புகார்  கொடுமை  தற்கொலை  சென்னையில் மருத்துவர் கணவன் மீது மனைவி புகார்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  மருத்துவர் கணவன் மீது மனைவி புகார்  wife filed complaint against cruel husband in chennai  wife filed complaint against cruel husband  குற்றச் செய்திகள்
புகார்

சென்னை: கொளத்தூர் பகுதியை சேர்ந்த லதா(51), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தனது கணவர் மருத்துவர் ராஜ்குமார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றுவதாகவும், குடும்பப் பிரச்னை ஏற்பட்டு தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற மகள்

இதையடுத்து தனது மகன் மீது பொய் புகார் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளதாகவும், குடும்பத்தினரோடு சேர்ந்து, தனது மகளையும் கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் தனது மகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆறு மாதங்களாக தன்னை கொடுமை படுத்திய கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அப்புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் அடிப்படையில் மருத்துவர் ராஜ்குமார், தந்தை நடராஜன், தாய் சம்பூரணம், சகோதரிகள் தேன்மொழி, பூங்கோதை ஆகிய 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலுக்கு இடையூறு... கணவரை கொன்று எரித்த மனைவி

சென்னை: கொளத்தூர் பகுதியை சேர்ந்த லதா(51), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தனது கணவர் மருத்துவர் ராஜ்குமார் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றுவதாகவும், குடும்பப் பிரச்னை ஏற்பட்டு தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற மகள்

இதையடுத்து தனது மகன் மீது பொய் புகார் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளதாகவும், குடும்பத்தினரோடு சேர்ந்து, தனது மகளையும் கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் தனது மகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆறு மாதங்களாக தன்னை கொடுமை படுத்திய கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அப்புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் அடிப்படையில் மருத்துவர் ராஜ்குமார், தந்தை நடராஜன், தாய் சம்பூரணம், சகோதரிகள் தேன்மொழி, பூங்கோதை ஆகிய 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலுக்கு இடையூறு... கணவரை கொன்று எரித்த மனைவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.