ETV Bharat / state

'லியோ' ஆடியோ வெளியீட்டு விழா திடீர் ரத்து - உண்மை நிலவரம் என்ன?

Leo Audio launch cancelled: ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளை குவித்து வரும் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திடீர் ரத்து ஆனதைத் தொடர்ந்து, இந்த ரத்திற்கான காரணம் அரசியலா? பாதுகாப்பா? என பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. அந்த வகையில் இதன் உண்மை நிலவரத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 5:53 PM IST

லியோ ஆடியோ வெளியீட்டு விழா திடீர் ரத்து - உண்மை நிலவரம் என்ன?
லியோ ஆடியோ வெளியீட்டு விழா திடீர் ரத்து - உண்மை நிலவரம் என்ன?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கரோனா சமயத்தில் வெளியானாலும் நல்ல வசூலை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். இப்படம் இந்திய சினிமாவையே திருப்பிப் போட்டது.

கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்து, கமல்ஹாசனின் திரை வாழ்விலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதனால் லோகேஷ் கனகராஜ் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விக்ரம் படத்தை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'லியோ' என்று தலைப்பு வைக்கப்பட்டது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் இது 100 சதவீதம் தன்னுடைய படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், திரிஷா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் 19-ஆம்‌ தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'லியோ'. நீண்ட நாட்களாக படம் குறித்த எவ்வித அப்டேட்டும் வராததால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, கடந்த வாரம் முதல் படத்தின் பல்வேறு மொழிகளில் இருந்து போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, மிக முக்கியமான நிகழ்ச்சியான படத்தின் 'இசை வெளியீட்டு விழா' எப்போது என்று காத்துக்கொண்டிருந்த ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில், இந்த மாதம் 30-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதன்படி, அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தின.

மேலும், டிக்கெட்டுகளும் விநியோகம் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஆயத்தமானது. ஆனால் திடீரென நேற்றிரவு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுlலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ X தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாஸ் வேண்டும் என்று அதிகமான பேர் கோரிக்கை வைப்பதாலும், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், லியோ இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்களுடன் உங்களோடு தொடர்பில் இருப்போம். மேலும், பலர் நினைப்பதுபோல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதில் அரசியல் காரணம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த முறை ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன. பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் நிகழ்ச்சி ரத்து செய்யாமல் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

ஏராளமான போலி டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் உண்மையான டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் உள்ளே செல்ல முடியாமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ரசிகர்கள் பலரும் அவதியுற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதி கொண்டது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேல் டிக்கெட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இடப்பற்றாக்குறை காரணமாக ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்தது போல் ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என தயாரிப்பு நிறுவனம் நினைத்திருக்கலாம். அதுமட்டுமின்றி லியோ இசை வெளியீட்டு விழாவுக்கும் போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், எப்படியும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நினைத்த தயாரிப்பு நிறுவனம் விழாவை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிரச்சினை கொடுத்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. காரணம், தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் திரையரங்குகளை தயார் செய்து கொடுக்கும்.

அதுமட்டுமின்றி, தற்போது உள்ள அரசியல் சூழலில் தேவையில்லாமல் விஜய்யுடன் மோதி, தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க திமுக தரப்பு தயாராக இருக்காது என்பதே உண்மை. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றும் கருத்து நிலவுகிறது.

மேலும், ரசிகர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சமூக வலைத்தளங்களில் ஒருபுறம் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இது, நடிகர் விஜய்யின் குட்டிக்கதையை கேட்க காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், தைரியமான முடிவை பாராட்டித்தான் ஆக வேண்டும். அடுத்து படம் வெளியாகும் வரை டீஸர், டிரைலர் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்கள்‌ காத்துக்கொண்டு இருக்கின்றன.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களோடு கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கரோனா சமயத்தில் வெளியானாலும் நல்ல வசூலை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். இப்படம் இந்திய சினிமாவையே திருப்பிப் போட்டது.

கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்து, கமல்ஹாசனின் திரை வாழ்விலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதனால் லோகேஷ் கனகராஜ் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விக்ரம் படத்தை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'லியோ' என்று தலைப்பு வைக்கப்பட்டது.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் இது 100 சதவீதம் தன்னுடைய படமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், திரிஷா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் 19-ஆம்‌ தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'லியோ'. நீண்ட நாட்களாக படம் குறித்த எவ்வித அப்டேட்டும் வராததால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, கடந்த வாரம் முதல் படத்தின் பல்வேறு மொழிகளில் இருந்து போஸ்டர் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து, மிக முக்கியமான நிகழ்ச்சியான படத்தின் 'இசை வெளியீட்டு விழா' எப்போது என்று காத்துக்கொண்டிருந்த ரசிகர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில், இந்த மாதம் 30-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதன்படி, அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து, புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தின.

மேலும், டிக்கெட்டுகளும் விநியோகம் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஆயத்தமானது. ஆனால் திடீரென நேற்றிரவு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுlலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ X தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாஸ் வேண்டும் என்று அதிகமான பேர் கோரிக்கை வைப்பதாலும், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், லியோ இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்களுடன் உங்களோடு தொடர்பில் இருப்போம். மேலும், பலர் நினைப்பதுபோல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதில் அரசியல் காரணம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த முறை ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன. பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் நிகழ்ச்சி ரத்து செய்யாமல் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

ஏராளமான போலி டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் உண்மையான டிக்கெட் வைத்திருந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் உள்ளே செல்ல முடியாமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ரசிகர்கள் பலரும் அவதியுற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதி கொண்டது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேல் டிக்கெட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இடப்பற்றாக்குறை காரணமாக ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்தது போல் ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என தயாரிப்பு நிறுவனம் நினைத்திருக்கலாம். அதுமட்டுமின்றி லியோ இசை வெளியீட்டு விழாவுக்கும் போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், எப்படியும் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நினைத்த தயாரிப்பு நிறுவனம் விழாவை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிரச்சினை கொடுத்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. காரணம், தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் திரையரங்குகளை தயார் செய்து கொடுக்கும்.

அதுமட்டுமின்றி, தற்போது உள்ள அரசியல் சூழலில் தேவையில்லாமல் விஜய்யுடன் மோதி, தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க திமுக தரப்பு தயாராக இருக்காது என்பதே உண்மை. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றும் கருத்து நிலவுகிறது.

மேலும், ரசிகர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சமூக வலைத்தளங்களில் ஒருபுறம் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இது, நடிகர் விஜய்யின் குட்டிக்கதையை கேட்க காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், தைரியமான முடிவை பாராட்டித்தான் ஆக வேண்டும். அடுத்து படம் வெளியாகும் வரை டீஸர், டிரைலர் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்கள்‌ காத்துக்கொண்டு இருக்கின்றன.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களோடு கபடி விளையாடிய அமைச்சர் பொன்முடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.