ETV Bharat / state

தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

author img

By

Published : Apr 23, 2022, 3:36 PM IST

தமிழ்நடு, புதுச்சேரியில் அடுத்த நான்கு நாள்களுக்கு லேசானது முதல் கனமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவையில் அடுத்த நான்கு நாளைக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவையில் அடுத்த நான்கு நாளைக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்.23) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழ்நாடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நாளை (ஏப்.24) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், நாகர்கோவில் (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7செ.மீ, கலியல் (கன்னியாகுமரி) குழித்துறை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ, கோத்தகிரி (நீலகிரி), நாகர்கோவில் தலா 5 செ.மீ, மயிலாடி (கன்னியாகுமரி), இளையங்குடி, தொண்டி (ராமநாதபுரம்), வால்பாறை பிடோ (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்), சூரங்குடி (தூத்துக்குடி) தலா 4செ.மீ, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை), கொடைக்கானல் (மாவட்டம் திண்டுக்கல்), குன்னூர் பிடோ (நீலகிரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), (ராமநாதபுரம்), கயத்தாறு (தூத்துக்குடி), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 3செ.மீ மழை பெய்துள்ளது.

அதேபோல், வைப்பார் (தூத்துக்குடி), தூத்துக்குடி, கயத்தார் ARG (தூத்துக்குடி), ராதாபுரம் (திருநெல்வேலி), தூத்துக்குடி துறைமுக AWS (தூத்துக்குடி), சோலையார் (கோவை), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 2செ.மீ, கொட்டாரம் (கன்னியாகுமரி), பேராவூரணி (தஞ்சாவூர்), நாமக்கல் (நாமக்கல்), காரைக்கால் (காரைக்கால்), இரணியல் (கன்னியாகுமரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை (காமுதி), கன்னியாகுமரி), (ராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : கேரள கடல் பகுதியையொட்டிய தென் தமிழ்நாடு - குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராமஜெயம் வழக்கு, துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!

சென்னை: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்.23) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழ்நாடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நாளை (ஏப்.24) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், நாகர்கோவில் (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7செ.மீ, கலியல் (கன்னியாகுமரி) குழித்துறை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ, கோத்தகிரி (நீலகிரி), நாகர்கோவில் தலா 5 செ.மீ, மயிலாடி (கன்னியாகுமரி), இளையங்குடி, தொண்டி (ராமநாதபுரம்), வால்பாறை பிடோ (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்), சூரங்குடி (தூத்துக்குடி) தலா 4செ.மீ, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), மானாமதுரை (சிவகங்கை), கொடைக்கானல் (மாவட்டம் திண்டுக்கல்), குன்னூர் பிடோ (நீலகிரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), (ராமநாதபுரம்), கயத்தாறு (தூத்துக்குடி), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 3செ.மீ மழை பெய்துள்ளது.

அதேபோல், வைப்பார் (தூத்துக்குடி), தூத்துக்குடி, கயத்தார் ARG (தூத்துக்குடி), ராதாபுரம் (திருநெல்வேலி), தூத்துக்குடி துறைமுக AWS (தூத்துக்குடி), சோலையார் (கோவை), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 2செ.மீ, கொட்டாரம் (கன்னியாகுமரி), பேராவூரணி (தஞ்சாவூர்), நாமக்கல் (நாமக்கல்), காரைக்கால் (காரைக்கால்), இரணியல் (கன்னியாகுமரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை (காமுதி), கன்னியாகுமரி), (ராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : கேரள கடல் பகுதியையொட்டிய தென் தமிழ்நாடு - குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராமஜெயம் வழக்கு, துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.