ETV Bharat / state

எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை..!

author img

By

Published : Oct 25, 2019, 10:32 AM IST

சென்னை: தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.

vigilance raid in esplanade fire station

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு பெருமளவில் லஞ்சம் பரிசுப் பொருளாகவும், பணமாகவும் கொடுக்கப்படுகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் வந்தது. இதனையடுத்து அதைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சிறப்புச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாக, சென்னை உயர் நீதிமன்றம் பின்புறம் அமைந்துள்ள எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், தீயணைப்பு நிலையத்தின் தலைமை அலுவலர் ராஜேஷ்கண்ணா கணக்கில் வராமல் கையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், சுப்பிரமணி என்னும் நபர் ஒரு லட்சம் ரூபாய் கையில் வைத்தவாறு தீயணைப்பு நிலையத்திலிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியில் பட்டாசுக் கடை அமைக்க அனுமதி வழங்குவதற்காக ராஜேஷ்கண்ணா தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டதாகவும் அதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை தான் கொண்டு வந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

இதற்கு எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய தலைமைக் காவலர் ராஜேஷ்கண்ணா மறுப்பு தெரிவிக்க இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்பு துறையினரின் தொடரும் வேட்டை!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு பெருமளவில் லஞ்சம் பரிசுப் பொருளாகவும், பணமாகவும் கொடுக்கப்படுகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் வந்தது. இதனையடுத்து அதைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சிறப்புச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஓர் அங்கமாக, சென்னை உயர் நீதிமன்றம் பின்புறம் அமைந்துள்ள எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், தீயணைப்பு நிலையத்தின் தலைமை அலுவலர் ராஜேஷ்கண்ணா கணக்கில் வராமல் கையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், சுப்பிரமணி என்னும் நபர் ஒரு லட்சம் ரூபாய் கையில் வைத்தவாறு தீயணைப்பு நிலையத்திலிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியில் பட்டாசுக் கடை அமைக்க அனுமதி வழங்குவதற்காக ராஜேஷ்கண்ணா தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டதாகவும் அதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை தான் கொண்டு வந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

இதற்கு எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய தலைமைக் காவலர் ராஜேஷ்கண்ணா மறுப்பு தெரிவிக்க இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்பு துறையினரின் தொடரும் வேட்டை!

Intro:Body:*எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை...*

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் பெருமளவில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் பரிசுப் பொருட்களாகவும், பணமாகவும் அரசு அதிகாரிகளுக்கு இடையே பரிமாறுவது வந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சிறப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பின்புறம் அமைந்துள்ள எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் தலைமை அதிகாரி ராஜேஷ்கண்ணா விடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் கணக்கில் வராமல் கையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சுப்பிரமணி என்னும் நபர் ஒரு லட்சம் ரூபாய் கையில் வைத்தவாறு தீயணைப்பு நிலையத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியில் பட்டாசு கடை அமைக்க அனுமதி வழங்குவதற்காக ராஜேஷ் கண்ணன் தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டதாகவும் அதற்காக தான் ஒரு லட்ச ரூபாய் கொண்டு வந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

இதற்கு எஸ்ப்லனேடு தீயணைப்பு நிலைய தலைமை அதிகாரி ராஜேஷ் கண்ணா மறுப்பு தெரிவிக்க இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.