ETV Bharat / state

தமிழ்நாட்டு மீனவர் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்! - 121 படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை நீதிமன்றம் ஆணை

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை நடுவண் அரசு உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென என மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்கவை உறுப்பினருமான வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் !
தமிழ்நாட்டு மீனவர் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் !
author img

By

Published : Nov 9, 2020, 2:32 PM IST

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மின்அஞ்சல் வழியாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியைத் தங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றது. நூற்றுக்கணக்கானோரைப் பிடித்துக்கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல்செய்தனர்.

ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 லட்சம் பெறுமதியானவை. தமிழ்நாட்டு மீனவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டிவருகின்றார்கள். அந்தப் படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம்.

இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்குமாறு கோரி, 2015-2016ஆம் ஆண்டுகளில் நான் தொடர்ச்சியாகத் தங்களிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்துள்ளேன். ஆனால், பயன் எதுவும் இல்லை.

இப்போது, 121 படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எனவே, நடுவண் அரசு உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும் அல்லது அதற்கு இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும். தாங்கள் இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதே போன்று, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் வைகோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மின்அஞ்சல் வழியாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியைத் தங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றது. நூற்றுக்கணக்கானோரைப் பிடித்துக்கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல்செய்தனர்.

ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 லட்சம் பெறுமதியானவை. தமிழ்நாட்டு மீனவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டிவருகின்றார்கள். அந்தப் படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம்.

இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்குமாறு கோரி, 2015-2016ஆம் ஆண்டுகளில் நான் தொடர்ச்சியாகத் தங்களிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்துள்ளேன். ஆனால், பயன் எதுவும் இல்லை.

இப்போது, 121 படகுகளை உடைத்து நொறுக்க இலங்கை நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எனவே, நடுவண் அரசு உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும் அல்லது அதற்கு இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும். தாங்கள் இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதே போன்று, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் வைகோ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.