ETV Bharat / state

'மத்திய அரசு இந்தியாவைப் பிரிக்க முயலுகிறது' - வைகோ குற்றச்சாட்டு - deformation case

சென்னை: இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டுவருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

vaiko
author img

By

Published : Jul 15, 2019, 1:10 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் எவரும் தப்பிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கோ அதிபர் மீது தொடரப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான வழக்கில் தற்போது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வைகோ, இதே நிலைமைதான் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கும் நடக்கும் என்றார்.

மேலும் மத்திய அரசு சிறுபான்மை மக்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பசுக்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என கூறிவருவதாக புகார் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில், அஞ்சல் துறையில் தமிழர்கள் இருக்கக் கூடாது என கருதி மத்திய அரசு தமிழில் தேர்வு எழுதக் கூடாது என்று அறிவித்துள்ளதை குறிப்பிட்டார்.

இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயல்கிறது - வைகோ

இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டுவருவதாக குற்றம்சாட்டிய வைகோ, இதைக் கூறும் தன் மீது வழக்கு தொடரப்பட்டால் அதையும் எதிர்கொள்ளத் தாம் தயார் எனத் தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் எவரும் தப்பிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கோ அதிபர் மீது தொடரப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான வழக்கில் தற்போது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வைகோ, இதே நிலைமைதான் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கும் நடக்கும் என்றார்.

மேலும் மத்திய அரசு சிறுபான்மை மக்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பசுக்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என கூறிவருவதாக புகார் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில், அஞ்சல் துறையில் தமிழர்கள் இருக்கக் கூடாது என கருதி மத்திய அரசு தமிழில் தேர்வு எழுதக் கூடாது என்று அறிவித்துள்ளதை குறிப்பிட்டார்.

இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயல்கிறது - வைகோ

இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டுவருவதாக குற்றம்சாட்டிய வைகோ, இதைக் கூறும் தன் மீது வழக்கு தொடரப்பட்டால் அதையும் எதிர்கொள்ளத் தாம் தயார் எனத் தெரிவித்தார்.

Intro:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்


Body:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இனப்படுகொலைக்கு எதிராக செயல்பட்டவர்கள் எவரும் தப்பிக்க முடியாது காங்கோ அதிபர் மீது இனப்படுகொலைக்கு வழக்கு தொடரப்பட்டு இப்போது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது இதே நிலைமைதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கும் கூடிய விரைவில் தண்டனை வழங்கப்படும்

மத்திய அரசு சிறுபான்மை மக்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பசுக்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்கிறார்கள் மாநில அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கி பசுக்களைப் பராமரிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசில் துணை அமைப்பான ராஷ்ட்ரிய காமதேனு அறிவித்துள்ளது

இதே போலத்தான் தபால்துறையில் தமிழர்கள் இருக்கக் கூடாது என்று மத்திய அரசு தமிழில் தேர்வு எழுத கூடாது என்று அறிவித்துள்ளது இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது இது குறித்தும் என் மீது வழக்கு தொடரப்பட்டால் அதையும் எதிர்கொள்வேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்


Conclusion:மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.