ETV Bharat / state

'தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை' - சஞ்ஜிப் பானர்ஜி

author img

By

Published : Jun 28, 2021, 2:10 PM IST

வழக்கறிஞர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.

s
s

சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள், கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் என். கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி பி. வில்சன், தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில்  உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியம்
விழாவில் உதயநிதி, மா. சுப்பிரமணியன்
முகாமின் முதல் தடுப்பூசியை இரண்டாவது தவணையாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செலுத்திக்கொண்டார். முகாமை தொடங்கிவைத்த பின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசுகையில், "கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை. கரோனா மீண்டும் பரவாமல் இருக்க முகக்கவசம், கிருமி நாசினி, தகுந்த இடைவெளி உள்ளிட்டவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி, கரோனா பெருந்தொற்றைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான் எனவும், 11 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ள நிலையில், ஒரு கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்பொழுது வரை செலுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒன்பது கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுத்தர உயர் நீதிமன்றம் சார்பில் ஒன்றிய அரசை அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அடுத்த 10 நாள்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும். தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உள்ளது. அங்கு 90 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று காலை முதல் தடுப்பூசி இல்லை எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான்" எனத் தெரிவித்தார்.


விழாவில் பேசிய நீதிபதி என். கிருபாகரன், கரோனாவால் வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்றும், தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'மணமக்களுக்கு மண் அடுப்பு; அரசுக்குப் பாடம் எடுப்பு' - நண்பர்கள் தந்த பரிசும் பாடமும் அடடே!

சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள், கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் என். கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி பி. வில்சன், தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில்  உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியம்
விழாவில் உதயநிதி, மா. சுப்பிரமணியன்
முகாமின் முதல் தடுப்பூசியை இரண்டாவது தவணையாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செலுத்திக்கொண்டார். முகாமை தொடங்கிவைத்த பின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசுகையில், "கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை. கரோனா மீண்டும் பரவாமல் இருக்க முகக்கவசம், கிருமி நாசினி, தகுந்த இடைவெளி உள்ளிட்டவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி, கரோனா பெருந்தொற்றைத் தடுக்க ஒரே வழி தடுப்பூசிதான் எனவும், 11 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ள நிலையில், ஒரு கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்பொழுது வரை செலுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒன்பது கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுத்தர உயர் நீதிமன்றம் சார்பில் ஒன்றிய அரசை அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அடுத்த 10 நாள்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும். தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உள்ளது. அங்கு 90 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்று காலை முதல் தடுப்பூசி இல்லை எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான்" எனத் தெரிவித்தார்.


விழாவில் பேசிய நீதிபதி என். கிருபாகரன், கரோனாவால் வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்றும், தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'மணமக்களுக்கு மண் அடுப்பு; அரசுக்குப் பாடம் எடுப்பு' - நண்பர்கள் தந்த பரிசும் பாடமும் அடடே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.