அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஜூன் 13ஆம் தேதி சசிகலா தலைமையில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் இவர்கள் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக இந்தத் திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 16ஆம் தேதி ஜெயஹரிணிக்கும் ராமநாதனுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) அன்று இந்தத் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், அண்ணா பிறந்தநாளுக்கு அடுத்த நாள் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது.
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த தினகரன் - அனுராதா தம்பதிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் வேண்டிய பிறகுதான் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மகளின் காதுகுத்து நிகழ்ச்சியை அந்தக் கோயிலில் டிடிவி நடத்தினார். அந்த விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருமணத்தையும் அதே கோயிலில் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு தங்க பேனா, மகனுக்கு பிரபாகரன் பெயர்: விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!