ETV Bharat / state

வாகன சோதனையில் சிக்கிய தங்கம், மடிக்கணினி, வெளிநாட்டு மதுபானம்!

author img

By

Published : Nov 16, 2019, 7:15 PM IST

சென்னை: திருவல்லிக்கேணியில் வாகன சோதனையின்போது தங்கம், மடிக்கணினி, வெளிநாட்டு மதுபானம் உள்ளிட்ட பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

gold theft

ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர்கள் நாசர், அனிஷ் முகமது, நசீர். இவர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து ’கால்டாக்சி’ மூலம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வழியாக வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

அப்போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜன் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நாசர் உள்ளிட்டோர் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 140 கிராம் தங்கம், 20 மடிக்கணினிகள், 10 மதுபாட்டில்கள், 20 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.

கடத்திவரப்பட்ட தங்கம்
கடத்திவரப்பட்ட தங்கம்

இது குறித்து மூவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்தப் பொருள்களுக்கான ரசீது தங்களிடம் உள்ளது. ரசீதை ஒப்படைத்து பொருளை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறியதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் வாகன சோதனையில் 2 டன் குட்கா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர்கள் நாசர், அனிஷ் முகமது, நசீர். இவர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து ’கால்டாக்சி’ மூலம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வழியாக வந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

அப்போது, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜன் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நாசர் உள்ளிட்டோர் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 140 கிராம் தங்கம், 20 மடிக்கணினிகள், 10 மதுபாட்டில்கள், 20 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றினர்.

கடத்திவரப்பட்ட தங்கம்
கடத்திவரப்பட்ட தங்கம்

இது குறித்து மூவரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்தப் பொருள்களுக்கான ரசீது தங்களிடம் உள்ளது. ரசீதை ஒப்படைத்து பொருளை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறியதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் வாகன சோதனையில் 2 டன் குட்கா பறிமுதல்

Intro:Body:சென்னை திருவல்லிக்கேணியில் வாகன சோதனையின்போது தங்கம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்.

ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர்கள் நாசர், அனிஷ் முகமது மற்றும் நசீர். இவர்கள் மூவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கால்டாக்சி மூலம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வழியாக வந்துள்ளனர். அப்போது இன்று காலை 6 மணியளவில், திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பாக உதவி ஆய்வாளர் செல்வராஜன் தலைமையில் தலைமைக்காவலர் சன்னி லாய்ட் மற்றும் காவலர் ராஜதுரை ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாசர் உள்ளியிட்டோர் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 140 கிராம் தங்கம், பயன்படுத்தப்பட்ட 20 லேப்டாப்கள், 10 மதுபாட்டில்கள் மற்றும் 20 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்த விசாரணையில் தங்களிடம் இதற்கான ரசீது இருப்பதாகவும் அதனை ஒப்படைப்பதாகவும் மூவரும் கூறியுள்ளனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.