ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி முறைகேடு - முக்கிய குற்றவாளியை பிடிக்க மக்கள் உதவியை நாடிய சிபிசிஐடி

author img

By

Published : Feb 1, 2020, 7:57 PM IST

சென்னை: குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் உதவியை சிபிசிஐடி நாடியுள்ளது.

tnpsc fraud - cbcid seek the help of people
tnpsc fraud - cbcid seek the help of people

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.

அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளியாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

இடைத்தரகர் ஜெயக்குமார் ஏற்கனவே குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதால் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதில், 60-க்கும் மேற்பட்ட பேனாக்கள்,பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு - முக்கிய குற்றவாளியை பிடிக்க மக்கள் உதவியை நாடிய சிபிசிஐடி

இந்த நிலையில் ஜெயக்குமார் பற்றி அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திராவில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து, தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஜெயகுமாரின் புகைப்படத்தை சென்னை மாநகரம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் சுவரொட்டியாக ஒட்டியுள்ளனர். அதில் இவரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கவுள்ளதாகவும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.

அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளியாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை சிபிசிஐடி போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

இடைத்தரகர் ஜெயக்குமார் ஏற்கனவே குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதால் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதில், 60-க்கும் மேற்பட்ட பேனாக்கள்,பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு - முக்கிய குற்றவாளியை பிடிக்க மக்கள் உதவியை நாடிய சிபிசிஐடி

இந்த நிலையில் ஜெயக்குமார் பற்றி அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திராவில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து, தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஜெயகுமாரின் புகைப்படத்தை சென்னை மாநகரம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் சுவரொட்டியாக ஒட்டியுள்ளனர். அதில் இவரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கவுள்ளதாகவும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியை பிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது சிபிசிஐடி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள்.

அந்த விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 99 தேர்வர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அந்த நடவடிக்கையில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவிற்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 25ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளியாக இருந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சிபிசிஐடி போலீசாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. உடனே முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

இடைத்தரகர் ஜெயக்குமார் ஏற்கனவே குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதால் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியதில் 60க்கும் மேற்பட்ட பேனாக்கள்,பெண்ட்டிரைவ்,முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக, சிபிசிஐடி தரப்பில் செய்திக் குறிப்பும் வெளியிட்டப்பட்டது. அந்த செய்தி குறிப்பில் ஜெயக்குமார் உடைய புகைப்படத்தை வெளியிட்டு அவரைப்பற்றிய தகவல் கொடுக்கப்பவர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜெயகுமார் பற்றி அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆந்திராவில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஜெயகுமாரின் புகைப்படத்தை சென்னை மாநகரம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் சுவரொட்டியாக ஒட்டியுள்ளனர். அதில் இவரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்க உள்ளதாகவும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அந்த சுவரொட்டியில் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.