ETV Bharat / state

'மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும்' - அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: தமிழ்நாட்டில் மதுக்கடைகளை முழுமையாக மூடினால் கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்பு அதிகரிக்கும் அவல நிலை ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

author img

By

Published : Nov 8, 2019, 5:46 PM IST

Updated : Nov 8, 2019, 9:56 PM IST

jeyakkumar

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், ' திமுக ஆட்சிக் காலத்தில் தான் சாராயம் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகினர்.

மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை விழிப்புணர்வு பிரசாாரத்தின் மூலம் தான் வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக்கையைத்தான் அரசு முழுமையாக செய்து கொண்டு வருகிறது. மதுக்கூடாது என்பது அரசின் ஒரே கொள்கையாகும். ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் விளைவாக கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் கள்ளச்சாராயம், டர்பைன்ட் ஆயில், ஸ்பிரிட் போன்றவற்றை குடித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். இதுவரை 2,000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசு வேலைக்குச் செல்ல முடியும் என்ற நிலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தியுள்ளது. குரூப் 2 பணியில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

அதேபோல் பிறத் தேர்வுகளுக்கும் கொண்டு வருவது குறித்து தன்னாட்சி பெற்ற அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம்' - அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், ' திமுக ஆட்சிக் காலத்தில் தான் சாராயம் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகினர்.

மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை விழிப்புணர்வு பிரசாாரத்தின் மூலம் தான் வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக்கையைத்தான் அரசு முழுமையாக செய்து கொண்டு வருகிறது. மதுக்கூடாது என்பது அரசின் ஒரே கொள்கையாகும். ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட்டால், அதன் விளைவாக கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் கள்ளச்சாராயம், டர்பைன்ட் ஆயில், ஸ்பிரிட் போன்றவற்றை குடித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். இதுவரை 2,000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசு வேலைக்குச் செல்ல முடியும் என்ற நிலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தியுள்ளது. குரூப் 2 பணியில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.

அதேபோல் பிறத் தேர்வுகளுக்கும் கொண்டு வருவது குறித்து தன்னாட்சி பெற்ற அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்ற கருத்தில் உறுதியாக உள்ளோம்' - அமைச்சர் ஜெயக்குமார்!

Intro: மதுகடைகளை மூடினால் கள்ளச்சாரயம் பெருகும்
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Body: மதுகடைகளை மூடினால் கள்ளச்சாரயம் பெருகும்
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை,
தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடினால் கள்ளச்சாராயம் பெருகி உயிர் இழப்பு அதிகரிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்காலத்தில் சாரயம் அறிமுகப்படுத்தப்பட்டு மதுப்பழக்கத்திற்கு முழுமையாக ஆளாகிவிட்டனர். மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை விழிப்புணர்வு பிரச்சாாரத்தின் மூலம் தான் வெளி கொண்டு வர வேண்டும். அந்த வெளிக்கொண்டு வரும் பணியினைத்தான் அரசு முழுமையாக செய்துக் கொண்டு வருகிறது. மதுக்கூடாது என்பது அரசின் ஒரே கொள்கையாகும். ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட்டால் அதன் விளைவாக கள்ளச்சாரயம் ஆறாக ஓடும். மதுக்குடித்தவர்கள் அந்தப் பழகத்திற்கு அடிமையாகி உள்ளவர்கள் கள்ளச்சாரயாம், டர்பைன்ட் ஆயில், ஸ்பீரிட் போன்றவற்றை குடித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை வரும்.

1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.முதல்வராக பொறுப்பேற்றப் போது மதுவிலக்கிற்காக கடுமையான சட்டம் கொண்டு வந்தார். கொலைகாரனுக்கு ஜாமின் அளிக்கலாம். குடிகாரனுக்கு ஜாமின் இல்லைஎன கூறியதுடன், நாடு கடத்த வேண்டும் என கூறி சட்டம் கொண்டு வந்தார். குடிப்பவர்களை ஜெயிலில் தள்ளி, அதன் மூலம் பல்வேறு வகையில் அமுல்படுத்த நினைத்தோம். அதன் விளைவாக கள்ளச்சாரயம் பெருகி டர்பைன்ட் ஆயில், ஸ்பீரிட் போன்றவற்றை குடித்தனர்.

இதுவரை 2,000 மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன எனவும், 5 ஆண்டுகளுக்குள் மதுக்கடைகளை மூடுவோம் எனவே படிப்படியாக 5 ஆண்டுக்குள் முடுவோம் என கூறினார்.
தமிழ் தெரிந்தால் மட்டுமே அரசு வேலைக்குச் செல்ல முடியும் என்ற நிலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தி உள்ளது. குருப் 2 பணியில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அதேபோல் பிறத் தேர்வுகளுக்கு கொண்டு வருவது குறித்து தன்னாட்சி பெற்ற அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார். Conclusion:
Last Updated : Nov 8, 2019, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.