ETV Bharat / state

பொங்கல்; அதிக கட்டண வசூலித்தால்... ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

author img

By

Published : Jan 3, 2023, 5:23 PM IST

Updated : Jan 3, 2023, 9:31 PM IST

பொங்கல் பண்டிகையொட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிக கட்டண வசூல் குறித்த புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

tn
tn

சென்னை: பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜன.3) தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், "பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 பேருந்து நிலையங்களிலிருந்து வரும் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து மட்டும் 10,749 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதேபோல பிற ஊர்களில் இருந்து 6,183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 15,619 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 சிறப்பு முன்பதிவு மையங்கள், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தலா 1 சிறப்பு முன்பதிவு மையம் அமைக்கப்படும். tnstc official app மற்றும் www.tnstc.in மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்டப் புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள், பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற நான்கு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மறைந்த மின்வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

சென்னை: பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜன.3) தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், "பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 பேருந்து நிலையங்களிலிருந்து வரும் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து மட்டும் 10,749 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதேபோல பிற ஊர்களில் இருந்து 6,183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 15,619 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 சிறப்பு முன்பதிவு மையங்கள், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தலா 1 சிறப்பு முன்பதிவு மையம் அமைக்கப்படும். tnstc official app மற்றும் www.tnstc.in மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்டப் புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள், பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற நான்கு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மறைந்த மின்வாரிய பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

Last Updated : Jan 3, 2023, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.