ETV Bharat / state

வளர்ச்சிப் பணிகள் மீது தனி கவனம்: மாவட்ட வாரியாக ஐஏஎஸ் நியமனம்..!

தமிழ்நாட்டின் அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

author img

By

Published : May 25, 2023, 5:50 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை: இது குறித்து இன்று (மே 25) வெளியிடுள்ள செய்தி குறிப்பில், 'தமிழ்நாட்டின் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்கனவே, 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் கண்காணிப்பார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல்" - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!

அரசாணையின்படி, அரியலூா் மாவட்டத்துக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராயும், கோயம்பத்தூர் மாவட்டம் டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாரையும் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஹோட்டலை அபகரித்துக் கொண்டதாக அண்ணாமலை மீது பாஜக நிர்வாகி புகார்!

நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனாவும், நாமக்கல் மாவட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமரகுருபரனும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜனை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போல ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டத்துக்கு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் ஐடி பார்க்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

சென்னை: இது குறித்து இன்று (மே 25) வெளியிடுள்ள செய்தி குறிப்பில், 'தமிழ்நாட்டின் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்கனவே, 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய அணைகள் கட்டும் பணி, குடிமராமத்து, நீர்நிலைகளை மீட்டெடுத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமனம் செய்துள்ளனர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கை, திடக்கழிவு மேலாண்மை, ஊரக பகுதி மக்களுக்கான அடிப்படை வசதி தேவைகள் உள்ளிட்ட பணிகளையும் கண்காணிப்பார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல்" - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்!

அரசாணையின்படி, அரியலூா் மாவட்டத்துக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலா் அருண்ராயும், கோயம்பத்தூர் மாவட்டம் டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாரையும் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஹோட்டலை அபகரித்துக் கொண்டதாக அண்ணாமலை மீது பாஜக நிர்வாகி புகார்!

நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு எரிசக்தித் துறைச் செயலா் ரமேஷ் சந்த் மீனாவும், நாமக்கல் மாவட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலா் குமரகுருபரனும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நில நிா்வாக ஆணையா் எஸ்.நாகராஜனை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போல ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா், ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், சேலம் மாவட்டத்துக்கு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாக இயக்குநா் சங்கர் ஆகியோர் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது' இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் ஐடி பார்க்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.