ETV Bharat / state

’இயல்பு வாழ்க்கை திரும்பிட இணைந்து நிற்போம்’ - எம்எல்ஏகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

author img

By

Published : May 11, 2021, 4:40 PM IST

சென்னை: கரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டை மீட்க கட்சி பாகுபாடின்றி மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stalin
Stalin

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத்தொடர் இன்று (மே.11) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பேரவையின் தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், புதிதாக பதவியேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, கரோனா பேரிடர் காலத்திலிருந்து கட்சிப் பாகுபாடின்றி தமிழ்நாட்டை மீட்டெடுக்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "பொறுப்பேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்.

16ஆவது சட்டபேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் முதலமைச்சர் என்ற முறையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஒன்றியம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இந்தப் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணியாகும்.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்தத் தடைக்காலத்தில் பொருளாதார நெருக்கடியை அவர்கள் சமாளிக்கும் வகையில் குடும்ப அட்டைக்கு 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன், படுக்கை வசதி, மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. அரசு துறை சார்ந்த அலுவலர்கள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகம் - பத்திரிகைத் துறையினர் என பல தரப்பினரும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கின்ற பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர்.

சமூக நல ஆர்வலர்களும், பொதுநல அமைப்பினரும், தொழில் நிறுவனத்தாரும் மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணை நின்று உதவிக்கரம் அளித்து வருகிறார்கள். 16ஆவது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில், வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாகக் களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் தொகுதிகளில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி - ஆக்ஸிஜன் - மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து அதனைக் கொண்டு வரக் கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.

கரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்கு ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி - தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத்தொடர் இன்று (மே.11) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பேரவையின் தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், புதிதாக பதவியேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, கரோனா பேரிடர் காலத்திலிருந்து கட்சிப் பாகுபாடின்றி தமிழ்நாட்டை மீட்டெடுக்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது "பொறுப்பேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதலமைச்சரின் அன்பு வேண்டுகோள்.

16ஆவது சட்டபேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் முதலமைச்சர் என்ற முறையில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஒன்றியம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இந்தப் பேரிடரிலிருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணியாகும்.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன், இந்தத் தடைக்காலத்தில் பொருளாதார நெருக்கடியை அவர்கள் சமாளிக்கும் வகையில் குடும்ப அட்டைக்கு 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன், படுக்கை வசதி, மருந்துகள் ஆகியவை தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலைமையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் எனது தலைமையிலான அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. அரசு துறை சார்ந்த அலுவலர்கள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் அனைத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகம் - பத்திரிகைத் துறையினர் என பல தரப்பினரும் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காக்கின்ற பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர்.

சமூக நல ஆர்வலர்களும், பொதுநல அமைப்பினரும், தொழில் நிறுவனத்தாரும் மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணை நின்று உதவிக்கரம் அளித்து வருகிறார்கள். 16ஆவது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில், வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாகக் களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது.

எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று, பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் தொகுதிகளில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி - ஆக்ஸிஜன் - மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ இந்த அரசின் கவனத்திற்கு விரைந்து அதனைக் கொண்டு வரக் கோருகிறேன். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களைப் பாதுகாப்பதில் உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன்.

கரோனா பேரிடரிலிருந்து தமிழ்நாட்டை மீட்பதற்கு ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி - தோழமைக் கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.