ETV Bharat / state

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாநிலை போராட்டம்

author img

By

Published : Jul 7, 2019, 5:00 PM IST

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் உண்ணாநிலை போராட்டம் இன்று நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாநிலை போராட்டம்

அரசுப்பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே பல கட்டங்களாகத் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் மீது தமிழ்நாடு அரசு பணி நீக்கம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாநிலை போராட்டம்

மேலும் இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவைத் தேர்தலுக்கு முன்பிருந்தே பல கட்டங்களாகத் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் மீது தமிழ்நாடு அரசு பணி நீக்கம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தினர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாநிலை போராட்டம்

மேலும் இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 07.07.19

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாநிலை அரப்போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பல கட்டப் போராட்டம் தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலர் மீது தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. இவ்வமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.