ETV Bharat / state

16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா?

author img

By

Published : Jun 20, 2021, 11:08 PM IST

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நாளை(ஜுன் 20) காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. புதிய அரசின் கொள்கை நிலைப்பாடு, வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற ஆவல் மக்களிடம் எழுந்துள்ளது.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடர்
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடர்

சென்னை: தமிழ்நாடு அரசின் 15ஆவது சட்டப்பேரவையின் இறுதி கூட்டம் பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்டது. இறுதி கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதே போல விவசாயிகளுக்கான நகை கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைப் பொது தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள், மே 2ஆம் தேதி வெளியாகின. அதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, திமுக தனிப்பெரும்பான்மையுடன் மே 7ஆம் தேதி ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், மரபுப்படி ஆளுநர் உரையுடன் நாளை (ஜூன் 21) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 10 மணிக்கு தனது உரையை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் படிப்பார். அந்த உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு படித்து முடிப்பார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு, கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

அதன்படி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுவார்.

திமுகவின் முதல் கூட்டம்

திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பெற்ற பின்பு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிவிப்புகளில் உள்ள வாக்குறுதிகளில் முக்கியமானவை சில அறிவிப்புகளாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என ஆளுநர் உரையில் தெரிவிக்கலாம்.

தமிழ்நாட்டில் 'நீட்' உள்பட எந்தவித பொது நுழைவுத் தேர்வு, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும், நீட் தேர்வை ரத்து செய்யத் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும், தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிராக இயற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டுமென ஆளுநர் தனது உரையில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல, தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேது சமுத்திரத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமென ஆளுநர் உரையில் அழுத்தமாக வலியுறுத்தப்படலாம்.

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிகிறது.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் கொள்கை முடிவுகளாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கை படிப்படியாக நிறைவேற்றுவது குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் கொள்கையளவில் கோடிட்டுக் காட்டலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்து அறிவிக்கும்.

அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும் கட்சியாக இருந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் குறித்து காரசார விவாதத்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பெட்ரோல் விலை உயர்வு, நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு, விவசாயிகளின் நலன், மேகேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க் கட்சியினர் சட்டப்பேரவையில் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், துறைவாரியான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்து, பட்ஜெட் தாக்கல் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: 11 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: எவை எவைக்கு அனுமதி

சென்னை: தமிழ்நாடு அரசின் 15ஆவது சட்டப்பேரவையின் இறுதி கூட்டம் பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்டது. இறுதி கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதே போல விவசாயிகளுக்கான நகை கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைப் பொது தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள், மே 2ஆம் தேதி வெளியாகின. அதில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, திமுக தனிப்பெரும்பான்மையுடன் மே 7ஆம் தேதி ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், மரபுப்படி ஆளுநர் உரையுடன் நாளை (ஜூன் 21) காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமென, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 10 மணிக்கு தனது உரையை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் படிப்பார். அந்த உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு படித்து முடிப்பார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்தலாம் என்பது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு, கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.

அதன்படி ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுவார்.

திமுகவின் முதல் கூட்டம்

திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பெற்ற பின்பு நடக்கும் முதல் கூட்டம் என்பதால், திமுகவின் தேர்தல் அறிவிப்புகளில் உள்ள வாக்குறுதிகளில் முக்கியமானவை சில அறிவிப்புகளாக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என ஆளுநர் உரையில் தெரிவிக்கலாம்.

தமிழ்நாட்டில் 'நீட்' உள்பட எந்தவித பொது நுழைவுத் தேர்வு, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும், நீட் தேர்வை ரத்து செய்யத் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும், தமிழ்நாடு சட்டப்பேரவை ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிராக இயற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டுமென ஆளுநர் தனது உரையில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஆளுநர் உரையில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல, தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேது சமுத்திரத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமென ஆளுநர் உரையில் அழுத்தமாக வலியுறுத்தப்படலாம்.

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தெரிகிறது.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு புதிய அறிவிப்புகள் கொள்கை முடிவுகளாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கை படிப்படியாக நிறைவேற்றுவது குறித்து பல்வேறு புதிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் கொள்கையளவில் கோடிட்டுக் காட்டலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளுநர் உரை மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்து அறிவிக்கும்.

அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஆளும் கட்சியாக இருந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் குறித்து காரசார விவாதத்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பெட்ரோல் விலை உயர்வு, நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு, விவசாயிகளின் நலன், மேகேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க் கட்சியினர் சட்டப்பேரவையில் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன், துறைவாரியான பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்து, பட்ஜெட் தாக்கல் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: 11 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: எவை எவைக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.