ETV Bharat / state

பட்டப்பகலில் மூதாட்டியிடம் பணம் பறித்த கும்பல்!

author img

By

Published : Aug 8, 2020, 9:59 PM IST

சென்னை: ஏடிஎம் மையத்தில் 10ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மூதாட்டியிடமிருந்து அடையாளம் தெரியாத கும்பல் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டச் செய்திகள்  மூதாட்டியிடம் வழிப்பறி  சங்கர் நகர் வழிப்பறி  chennai robbery cctv
பட்டப்பகலில் மூதாட்டியைத் தாக்கி ரூ. 10 ஆயிரத்தைப் பறித்த கும்பல்

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. 65 வயது நிரம்பிய இவர், அதே பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து தனது பர்ஸில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்றது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மூதாட்டியை மீட்டு சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, பணத்தை திருடிச் சென்ற கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டச் செய்திகள்  மூதாட்டியிடம் வழிப்பறி  சங்கர் நகர் வழிப்பறி  chennai robbery cctv
பணத்தை பறித்த இளைஞர்கள்

பட்டப்பகலில் சங்கர்நகர் பகுதியில் செயின் பறிப்பு, செல்போன் திருட்டு, பணம் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: பெங்களூர் நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி கொள்ளை - காவல்துறையினர் விசாரணை!

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. 65 வயது நிரம்பிய இவர், அதே பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து தனது பர்ஸில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்றது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மூதாட்டியை மீட்டு சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சங்கர் நகர் காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, பணத்தை திருடிச் சென்ற கும்பலைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டச் செய்திகள்  மூதாட்டியிடம் வழிப்பறி  சங்கர் நகர் வழிப்பறி  chennai robbery cctv
பணத்தை பறித்த இளைஞர்கள்

பட்டப்பகலில் சங்கர்நகர் பகுதியில் செயின் பறிப்பு, செல்போன் திருட்டு, பணம் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: பெங்களூர் நகைக்கடையில் 50 கிலோ வெள்ளி கொள்ளை - காவல்துறையினர் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.