ETV Bharat / state

மக்கள் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்படவில்லை: அமைச்சர் நாசர்

author img

By

Published : Nov 4, 2022, 12:41 PM IST

ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் சில்லரையாக வாங்குபவர்களுக்கு மட்டும் 12 ரூபாய் உயர்த்தப்பட்டு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர்
பால்வளத்துறை அமைச்சர்

சென்னை: தலைமைச் செயலகத்தில் ஆவின் பால் விலை தொடர்பாக செய்தியாளர்களை அமைச்சர் நாசர் சந்தித்தார். அப்போது , விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து, 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும், தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48 ரூபாய்க்கு சில்லரையாக விற்கப்படும் நிலையில், கார்டு வைத்திருப்பவர்களுக்கு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சில்லரையாக வாங்குபவர்களுக்கு மட்டுமே 60 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த ஆரஞ்சு நிற பாலை 11 லட்சம் பேர் மட்டுமே வாங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிற மாநிலங்களிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் விற்கப்படும் பால் விலையோடு ஒப்பிடும் போது சுமார் 10 ரூபாய் குறைவாக தமிழகத்தில் ஆவின் பால் விற்கப்படுவதாக அமைச்சர் நாசர் விளக்கம் அளித்தார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆவின் டிலைட் பால் 90 நாட்கள் வரை கெடாத வகையில் பதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு

சென்னை: தலைமைச் செயலகத்தில் ஆவின் பால் விலை தொடர்பாக செய்தியாளர்களை அமைச்சர் நாசர் சந்தித்தார். அப்போது , விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து, 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும், தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48 ரூபாய்க்கு சில்லரையாக விற்கப்படும் நிலையில், கார்டு வைத்திருப்பவர்களுக்கு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சில்லரையாக வாங்குபவர்களுக்கு மட்டுமே 60 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த ஆரஞ்சு நிற பாலை 11 லட்சம் பேர் மட்டுமே வாங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிற மாநிலங்களிலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் விற்கப்படும் பால் விலையோடு ஒப்பிடும் போது சுமார் 10 ரூபாய் குறைவாக தமிழகத்தில் ஆவின் பால் விற்கப்படுவதாக அமைச்சர் நாசர் விளக்கம் அளித்தார்.

பொதுமக்கள் பயன்படுத்தும் ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆவின் டிலைட் பால் 90 நாட்கள் வரை கெடாத வகையில் பதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.