தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டு மண்டலங்களுக்கு அடுத்த படியாக ராயபுரம் உள்ளது. தற்போது ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடு 90ஆக உள்ளது, சிகிச்சைப் பெற்று வருபவர்களில் விழுக்காடு 8ஆக உள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 602 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 677 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 29 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 2 ஆயிரத்து 896 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.
சென்னையில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரி நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
அண்ணா நகர் - 16224
கோடம்பாக்கம் - 16187
ராயபுரம் - 14091
தேனாம்பேட்டை - 13806
தண்டையார்பேட்டை - 12057
அடையாறு - 11070
திரு.வி.க. நகர் - 10941
வளசரவாக்கம் - 9149
அம்பத்தூர் - 10049
திருவொற்றியூர் - 4588
மாதவரம் - 5120
சோழிங்கநல்லூர் - 4028
பெருங்குடி - 4799
ஆலந்தூர் - 5438
மணலி - 2262