ETV Bharat / state

ஹஜ் பயணிகளுடன் மக்காவுக்கு புறப்பட்ட முதல் விமானம் - Makkah

சென்னை: புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையிலிருந்து மக்கா நகருக்கு 423 பேருடன் முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது.

Hajj passengers
author img

By

Published : Aug 1, 2019, 9:17 AM IST

உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரோபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.

இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து நான்காயிரத்து 464 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையிலிருந்து முதல் விமானம் நேற்று சவுதிஆரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 213 பெண்கள் உள்பட 423 பேர் பயணம் செய்தனர்.

விமான நிலையத்தில் ஹஜ் பயணிகளை வழியனுப்பும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார்

புனித ஹஜ் பயணம் சென்றவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வழியனுப்பிவைத்தார். சென்னையிலிருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5ஆம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் கூறுகையில், தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு நான்காயிரத்து 464 பேர் புனித ஹஜ் பயணத்திற்குச் செல்கின்றனர். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.6 கோடியை மானியமாக வழங்கியுள்ளார். இதில் ஒவ்வொரு பயணிக்கும் ரூ. 16 ஆயிரம் மானியமாக கிடைக்கும் என்றார்.

உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரோபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.

இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து நான்காயிரத்து 464 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையிலிருந்து முதல் விமானம் நேற்று சவுதிஆரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 213 பெண்கள் உள்பட 423 பேர் பயணம் செய்தனர்.

விமான நிலையத்தில் ஹஜ் பயணிகளை வழியனுப்பும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார்

புனித ஹஜ் பயணம் சென்றவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வழியனுப்பிவைத்தார். சென்னையிலிருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5ஆம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் கூறுகையில், தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு நான்காயிரத்து 464 பேர் புனித ஹஜ் பயணத்திற்குச் செல்கின்றனர். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.6 கோடியை மானியமாக வழங்கியுள்ளார். இதில் ஒவ்வொரு பயணிக்கும் ரூ. 16 ஆயிரம் மானியமாக கிடைக்கும் என்றார்.

Intro:புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 423 பேருடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
Body:புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 423 பேருடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது.

புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் சென்னையில் இருந்து 423 பேருடன் புறப்பட்டு சென்றது.
உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரோபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு புதுச்சேரி அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4464 பேர் தேர்வு செய்யப்பட்டனர். புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து முதல் விமானம் நேற்று சவுதிஆரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 213 பெண்கள் உள்பட 423 பேர் பயணம் செய்தனர். புனிதஹஜ் பயணத்தை
சென்றவர்களை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தார். இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் இர்பான் அகமது, சிறுபான்மை நலத்துறை செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் முகமது நசிமுத்தின் ஆகியோரும் வழியனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலைய பன்னாட்டு புறப்பாடு பகுதியில் விமானங்களில் பயணம் செய்ய அதிகமான பயணிகள் வருவதால் ஹஜ் பயணத்திற்காக வரும் பயணிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கினால் சிரமமங்கள் வரும் என்பதால் புதிய பன்னாட்டு வருகையை புறப்பாடு முனையமாக அதில் இருந்து ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் முலம் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது.
ஹஜ் பயணிகளை வழியனுப்பி வைத்துவிட்டு தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பர் கூறுகையில், தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 4464 பேர் புனித ஹஜ் பயணத்திற்கு செல்கின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு ரூ.6 கோடியை மானியமாக வழங்கி உள்ளார். இதில் ஒருவருக்கு ரூ. 16 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளின் ஏற்பாட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இறைவனின் அருளால் அவர்களின் பயணம் நிறைவேற பிராத்திக்கிறேன். தமிழகத்திற்கு கூடுதல் ஹஜ் பயணிகள் செல்ல கடந்த ஆண்டை விட இந்த 910 ஒதுக்கீடு கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.