ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று தேர்வு முடிவுகள் வெளியீடு

author img

By

Published : Dec 7, 2022, 10:57 PM IST

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தாள் ஒன்று முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று தேர்வு முடிவுகள் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துவதற்கான இடைநிலை ஆசிரியர் பணிக்குரிய தகுதிக்கான தாள் ஒன்று தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்றிற்கு கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் தேர்வினை நடத்தியது.

இந்தத் தேர்வில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் கலந்து கொண்டனர். தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அக்டோபர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்காலிக விடை குறிப்பிற்கு அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்பொழுது 1125 தேர்வர்கள் 3,696 விடைகள் மீது ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். மேலும் 491 கேள்விகள் மீது 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட தகவலும் பாட வாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வுக்குப் பின்னர் பாடவாரியாக வல்லுநர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடை குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களுக்கு கம்ப்யூட்டர் வழி தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வுகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன" என செய்திக்குறிப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.15.40 கோடி செலவில் விவசாயிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்த C

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துவதற்கான இடைநிலை ஆசிரியர் பணிக்குரிய தகுதிக்கான தாள் ஒன்று தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்றிற்கு கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் தேர்வினை நடத்தியது.

இந்தத் தேர்வில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் கலந்து கொண்டனர். தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அக்டோபர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்காலிக விடை குறிப்பிற்கு அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்பொழுது 1125 தேர்வர்கள் 3,696 விடைகள் மீது ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். மேலும் 491 கேள்விகள் மீது 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட தகவலும் பாட வாரியாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வுக்குப் பின்னர் பாடவாரியாக வல்லுநர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடை குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களுக்கு கம்ப்யூட்டர் வழி தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வுகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன" என செய்திக்குறிப்பில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.15.40 கோடி செலவில் விவசாயிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்த C

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.